அண்மையில் 'ஆர்.ஆர்.ஆர்.' படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது இயக்குநர் ராஜமவுலி, "நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதனால் அரசியல் பேச வேண்டாம். 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தைப் பற்றி மட்டும் பேசுவோம்," என்றார்.
"சென்னை வரும்போது பள்ளி மாணவனைப்போல் உணர்கிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளி. அனைத்தையும் கற்றுக் கொடுத்தது.
"ஏன் ஹாலிவுட் நடிகர்களை வைத்துப் படமெடுக்கவேண்டும்? நம் நடிகர்களே மிகவும் திறமையானவர்கள்தான். நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம்.
"என் கதை யாரை கதாநாயகனாக தேர்வு செய்கிறதோ அவர்களைத்தான் நான்
இயக்குவேன். பாகுபலி'யைப் போன்றே 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும்," என்று கூறினார்.

