உண்மையைப் பேசியதற்காக கடும் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் அறிமுகமானபோது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் பிரபாஸ் குறித்து இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாம். அதற்கு, அவர் யார் என்று தமக்குத் தெரியாது எனப் பதில் அளித்துள்ளார் நித்யா.
"இதை வைத்து சிலர் சர்ச்சையைக் கிளப்பினர். நான் அப்போதுதான் திரைத்துறைக்கு வந்திருந்தேன். உண்மையாகவே பிரபாஸ் யார் என்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் ரசிகர்கள் விமர்சித்தனர்.
"பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. அது என் மனதைக் காயப்படுத்தியது.எனக்கு முதலிடத்தைப் பிடிக்கும் ஆசை எல்லாம் இல்லை," என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
, :

