விஜய் சேதுபதியின் துபாய் வாழ்க்கை

விஜய் சேதுபதியின் துபாய் வாழ்க்கை

1 mins read
7b1588d4-049b-4e79-84b1-4f70c8037793
'சங்கத் தமிழன்' படத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா. -

துபா­யில் நடை­பெற்ற விருது நிகழ்ச்சி ஒன்­றில் பங­கேற்ற விஜய் சேது­பதி பல ஆண்­டு­க­ளுக்­கு முன்பு தாம் அங்கு தனி­யார் நிறு­வனத்­தில் வேலை பார்த்த நாள்­களை நினை­வு­கூர்ந்­தார்.

மேலும், துபாயை தமது இரண்­டா­வது தாய­க­மாக நினைப்­பதாகவும் அவர் கூறி­னார்.

"நான் சாதா­ரண நடுத்­தர குடும்­பத்­தைச் சேர்ந்­த­வன். நிறைய லட்சியங்­க­ளு­டன் கடந்த 2000ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் துபாய்க்கு வந்­தேன்.

"இங்­குள்ள சாலை­களில் எனது கன­வு­களை நினைத்­த­படி நடந்து சென்­றுள்­ளேன். எப்­போது இங்கு வந்­தா­லும், ஒரு­மு­றை­யா­வது நான் தங்­கி­யி­ருந்த இடத்­துக்­குச் சென்று பார்­வை­யி­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளேன்.

"இங்கு வந்­த­பி­றகு இது ஒரு புதிய நாடு, வெளி­நாடு என்ற உணர்வு ஏற்­ப­ட­வில்லை. துபா­யில் மூன்று ஆண்­டு­கள் பணி­யாற்­றிய பிறகு சென்னை சென்­ற­தும் எல்லாம் மாறி­விட்­டது.

"சினி­மா­வில் அறி­மு­க­மாகி, ஒரு நடி­க­னாக நான் இந்த அளவுக்கு வளர்ந்­துள்­ளேன் என்­பது ஒரு­வகை­யில் விபத்து­தான். துபாய் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரு­கிறது," என்­றார் விஜய் சேது­பதி.

ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு அங்கு வசிக்­கும் ஆசிய நாடு­களைச் சேர்ந்த செல்­வாக்கு மிகுந்த தொழில் அதி­பர்­கள், நிர்­வா­கி­களைத் தேர்வு செய்து விருது வழங்கி வரு­கிறது.

அண்­மைய நிகழ்ச்­சி­யில் இந்த விரு­து­களை தன் கையால் வழங்­கி­னார் சேது­பதி. இதை­ய­டுத்து திரைத்­துறை­யில் செல்­வாக்கு மிகுந்த நட்­சத்­தி­ரம் என்ற விருது சேது­ப­திக்கு வழங்­கப்­பட்­டது.