'மாநாடு' பட வெற்றிக்குப் பின்னர் திடீர் மோதல்

1 mins read
9c937372-7f57-4111-a5da-3e1d7c083699
(இடமிருந்து வலமாக) 'மாநாடு' இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி. -

'மாநாடு' படம் வெற்­றி­பெற்­றுள்ள நிலை­யில் அதன் நாய­கன் சிம்­பு­வின் தந்தை டி.ராஜேந்­த­ருக்­கும் தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்­சிக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டுள்­ளது.

'மாநாடு' படத்தை குறித்த தேதி­யில் வெளி­யி­டு­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டதை அடுத்து, ரூ.5 கோடிக்கு ராஜேந்­தர் உத்­த­ர­வா­தம் அளித்­தார். இத­னால் பிரச்­சி­னை­கள் பேசித்­ தீர்க்­கப்­பட்டு படமும் வெளி­யா­னது.

இந்­நி­லை­யில் படத்­தின் செயற்­கைக்­கோள் உரி­மையை தனி­யார் தொலைக்­காட்­சிக்கு விற்க முடிவு செய்­தார் தயாரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி.

இந்­நி­லை­யில், 'மாநாடு' படத்தை வெளி­யிட பெரு முயற்சி எடுத்த தங்­க­ளைக் கலந்­தா­லோ­சிக்­கா­மல் செயற்­கைக்­கோள் உரிமை விற்­கப்­பட்­டுள்­ள­தாக டி.ராஜேந்­தர் சென்னை உரி­மை­யி­யல் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­துள்­ளார்.

இது கோடம்­பாக்க வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. டி.ராஜேந்­த­ரின் இந்த நட­வ­டிக்­கைக்கு இயக்­கு­நர் பார­தி­ராஜா கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

படத்தை வெளி­யிட்டு பெற்­றுள்ள வெற்­றிக்­குப் பின்­னால் 'மாநாடு' தயா­ரிப்­பா­ள­ரும் நிதி­யா­ள­ரும் எவ்­வ­ளவு இடர்­க­ளைத் தாங்கி நின்­றார்­கள் என்­பதை மொத்த திரை­யு­ல­க­மும் அறி­யும் என்று ராஜேந்­த­ருக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் பார­தி­ராஜா குறிப்­பிட்­டுள்­ளார்.

"அப்­ப­டிப்­பட்ட தயா­ரிப்­பா­ளர், நிதி­யா­ளர் மீது தாங்­கள் வழக்­குத் தொடுத்­துள்ள செய்தி கேட்டு அதிர்ச்­சி­யுற்­றோம்," என பார­தி­ராஜா கூறி­யுள்­ளார்.