சக்தி மேகனா
சிங்கப்பூர் தமிழ்க் கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து 'விழியோரம்' எனும் படத்தைத் தயாரித்துள்ளனர்.
எதிர்வரும் 26ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு கார்னிவல் சினிமாஸில் முதல் காட்சி திரையிடப்பட இருக்கிறது. அதையடுத்து பொதுமக்கள் திரைப்படக் கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றத் திகிலை மையமாக கொண்டுள்ளது இந்தப் படம்.
"இப்படத்தில் வேலை செய்த புதுமுகங்கள் அதிக ஈடுபாட்டுடன், கடினமாக உழைத்துள்ளனர். கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் ஏற்படுத்திய முடக்கநிலைக்குப் பின் வெளிவரும் இந்தப் படம் அனைவருக்கும் ஒரு விருந்தாக அமையும்," என்று திரைக்கதையை எழுதியுள்ள திருமதி கீர்த்தனா கூறினார்.
"சிங்கப்பூரில் உள்ள திறமையான புது கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதுதான் படத்தின் முக்கிய நோக்கம். விழியோரம் என்பது ஒரு வலைத் தொடர். அந்த வலைத் தொடர்களை படமாக்கி, சிங்கப்பூர் மக்கள் பார்ப்பதற்கு இந்த ஆண்டு முதல் காட்சிகளைத் திரையிடுகிறோம்," என்கிறார் திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், சுதந்திர ஊடகக் கலைஞருமான திரு ரிஷி வர்மன் கூறினார்.
'விழியோரம்' முதல் காட்சிக்கான பார்ப்பதற்கு டிக்கெட்டுகளை https://www.theshufflestudios.com/vizhiyoram-premiere-show எனும் இணையத் தளத்தில் வாங்கலாம்.

