நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. சுராஜ் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி உள்ளது.
படப்பிடிப்புக்கு முன்பு இயக்குநர் சுராஜ், வடிவேலு உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இப்படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணனும் லண்டனில்தான் உள்ளாராம். அங்கிருந்தபடியே பாடல்களுக்கு மெட்டமைத்து, அதற்கு இயக்குநரிடம் ஒப்புதல் பெற உள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவிடம் உற்சாகம் தெரிகிறது என்றும் இந்தப் படத்தில் அவரது இயல்பான நகைச்சுவை வெளிப்படும் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'நாய் சேகர்' என்ற தலைப்பில் நடிகர் சதீஷ் நடித்து முடித்துள்ளார்.

