"தமிழ் ரசிகர்கள் இன்னும் பழைய சந்தானத்தை மறக்கவில்லை. நான் கதாநாயகனாக மாறிவிட்டாலும், எப்போதும் எனது பழைய நகைச்சுவையும் வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது," என்கிறார் சந்தானம்.
'சபாபதி' படத்துக்குப் பிறகு மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருவதாகச் சொல்பவர், ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப கதைகளைத் தேர்வு செய்யப் போவதாகக் கூறுகிறார்.
'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்களைத் தந்த ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படம், தமது நகைச்சுவைக் குழுவில் உள்ள ஆனந்த் இயக்கும் படம், தெலுங்கில் வெற்றி பெற்ற 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா'வின் மறுபதிப்பான 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சந்தானம். இப்போது புதுவையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
"நகைச்சுவை கதாபாத்திரங்களைக் கைவிட்டு கதாநாயகனாக மாறிய பின்னர் சில பிரச்சினைகள் நீடித்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் 'சக்கப் போடு போடுராஜா' படம் மூலம் கதாநாயகன் ஆனேன். அதில் நான் யாரையும் கிண்டல் செய்யமாட்டேன். தவிர மற்ற கதாபாத்திரங்களிடம் மரியாதையாகப் பேசுவேன், அறிவுரைகள் சொல்வேன்.
"ஆனால் அப்படி அமைக்கப்பட்ட பாத்திரத்தை மக்கள் ரசிக்கவில்லை. அந்த சந்தானம் வெறும் கதாநாயகன்தான். பார்க்க அழகாக இருப்பான், 'சிக்ஸ்பேக்' வைத்திருக்கும் இளைஞன் அவன்.
"தமிழ் ரசிகர்கள் அல்லாமல் பிறமொழி ரசிகர்கள் அதைப் பார்த்தால் கதாநாயகன் சந்தானம் மட்டுமே கண்களுக்குத் தெரிந்திருப்பேன். அதிக குறைகள் கூறியிருக்க மாட்டார்கள்.
"ஆனால் நம் மக்கள் அந்த சந்தானம் வேண்டாம் என்றனர். நகைச்சுவை வேண்டும், அனைத்துக்கும் பதிலடி தரும் சந்தானத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினர். அதனால்தான் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அதையும் கொடுத்து வருகிறேன்.
"அந்த வகையில் சில ஏற்ற இறக்கங்கள் இருப்பதை நானும் உணர்ந்துள்ளேன். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சந்தானத்தின் தனி முத்திரை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். காரணம், சந்தானம் என்ற கதாபாத்திரம் என்றும் மாறாது," என்கிறார் சந்தானம்.
சந்தானம்
, :

