இயக்குநர் ஜெயக்குமார் சேதுராமன் இயக்கிய 'செந்நாய்' திரைப்படம் நேப்பாள அனைத்துலகத் திரைப்பட விருதை வென்றுள்ளது.
அறிமுக இயக்குநரான இவர், சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அலசியுள்ளார். குறிப்பாக, சாதிய அமைப்புகள் பற்றி இந்தப் படம் பேசுகிறது.
கதாநாயகியாக செம்மலர் அன்னம் நடித்துள்ளார்.
இப்படம் ஏற்கெனவே போர்ட் பிளேயர் அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்த அறிமுகப் படத்திற்கான விருதை வென்றுள்ளது.

