சிம்புவும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதியும் ஜோடி சேர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'மாநாடு' படத்தின் வெற்றியை அடுத்து, சிம்புவை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருகின்றனர். அவரோ, தனக்கேற்ற கதை, நல்ல இயக்குநர், அனுபவமுள்ள தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்த பிறகே வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறார்.
இந்நிலையில் அவர் அடுத்து கோகுல் இயக்கத்தில் நடிக்க உள்ள 'கொரோனா குமார்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர். அதில் நாயகியாக நடிக்கக்கேட்டு அதிதியை அணுகி உள்ளனர். அவர் தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து வருகிறார்.
சிம்பு பட வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

