'புஷ்பா' படத்தில் அதன் நாயகன் அல்லு அர்ஜுனின் நடிப்பு தம்மை பிரமிக்க வைத்ததாகப் பாராட்டி உள்ளார் சமந்தா.
அந்தப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு சமந்தா போட்ட குத்தாட்டத்துக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அப்பாடலில் கவர்ச்சியாக நடித்துள்ளதாக கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், அல்லு அர்ஜுனை பாராட்டுவதற்காக மட்டுமே டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சமந்தா.
"ஒவ்வொரு நொடியும் உங்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு நடிப்பு. ஒரு நடிகர் எப்போதுமே சிறப்பாகச் செயல்படும்போது அவரை விட்டு விலகி நிற்பது இயலாத காரியம். 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் எனக்கு அப்படித்தான் தெரிந்தார்.
"பேச்சு, நடை, உடல்மொழி என உண்மையாகவே பிரமிப்பை ஏற் படுத்துகிறார்," என்று சமந்தா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், "மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு நன்றி... மனதைத் தொட்டுவிட்டீர்கள்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்காக சமந்தா ஆடிய கவர்ச்சி நடனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதைப் பொருட்படுத்தாமல், மேலும் ஒரு படத்தில் இதேபோன்ற குத்துப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளாராம் சமந்தா.