சிம்புவுக்கு அறிவுரை கூறிய விஜய்யின் தந்தை எஸ்ஏசி

1 mins read
464e4f36-1239-4c1b-8534-6dbd963de2e9
'மாநாடு' படப்பிடிப்பின்போது எஸ்.ஜே.சூர்யா, சுரேஷ் காமாட்சி, சிம்பு. -

"வெற்­றிக்­கா­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கும் வேளை­யில், அது கிடைத்த பிறகு மாறி­விடக் கூடாது," என்று மாநாடு படத்­தின் வெற்­றி­யைக் கொண்­டா­டும் நிகழ்­வில் இயக்­கு­நர் எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் பேசி­யது கோடம்­பாக்க வட்­டா­ரங்­களில் விவா­தங்­களை எழுப்பி உள்­ளது.

நடி­கர் விஜய்­யின் தந்­தை­யு­மான அவர், மாநாடு நாய­கன் சிம்­பு­வுக்கு அறி­வுரை கூறும் வகை­யில் பேசி­னார். வெற்றி நிகழ்­வுக்கு சிம்­பு­வும் வந்­தி­ருக்க வேண்­டும் என்­றார் எஸ்­ஏசி.

"சிம்­பு­வுக்கு இந்­தப் படம் நிச்­ச­யம் ஒரு திருப்­பு­மு­னை­தான். அவரை நம்பி தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி மிகப்­பெ­ரிய அள­வில் முத­லீடு செய்து, படத்தை தயா­ரித்து வெளி­யிட்­டுள்­ளார்.

"இந்­நி­லை­யில், படம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற்­றுள்­ளது. ஆனால், இந்த மகிழ்ச்­சியை நம்­மு­டன் சேர்ந்து கொண்­டாட வேண்­டிய சிம்பு இங்கு இல்லை. அவர் இங்கு வந்து வெற்­றி­யைக் கொண்­டாடி இருக்க வேண்­டும். ஒரு படத்­தின் வெற்­றி­யைக் கொண்­டாட அதன் நாய­கன் இருக்க வேண்­டும் என்­பது அவ­ருக்­கும் தெரிந்­தி­ருக்­கும். படப்­பிடிப்­பின்­போது எப்­படி இருந்­தோமோ, வெற்­றிக்­குப் பிற­கும் அப்­ப­டியே இருக்க வேண்­டும். அப்­போ­து­தான் இன்­னொரு வெற்றி கிடைக்­கும்," என்­றார் எஸ்ஏசி.

'மாநாடு' படத்­தின் செயற்­கைக்­கோள், பிற­மொழி உரி­மங்­களை விற்ற வகை­யில் சிம்பு தரப்­புக்­கும் தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்­சிக்­கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்படுகிறது.