'நன்றி'கள் தெரிவித்த பிரியா

'நன்றி'கள் தெரிவித்த பிரியா

3 mins read
2e8a4054-8fc8-4c28-bbf2-20970599ce81
பிரியா பவானி சங்கர் -

தமிழ் சினி­மா­வில் இன்­றைய தேதி­யில் அதிக படங்­களில் நடித்­துக்கொண்­டி­ருப்­ப­வர் பிரியா பவானி சங்­கர்.

சம்­பள விஷ­யத்­தில் இவர் கறார் காட்­ட­வில்லை என்­றா­லும், தயா­ரிப்­பா­ளர்­களோ அவர் எவ்­வ­ளவு கேட்­டா­லும் கொடுக்­கத் தயா­ராக உள்­ள­னர்.

இத்­த­னைக்­கும் தேடி வரும் அனைத்து வாய்ப்­பு­க­ளை­யும் பிரியா ஏற்­ப­தில்லை. ஒவ்­வொரு படத்­தின் கதை­யும் தனக்­கான கதா­பாத்­தி­ர­மும் வித்தி­யா­ச­மாக இருக்க வேண்­டும் என்­ப­தில் தெளி­வாக உள்­ளார்.

அந்த வகை­யில் சர்­ஜுன் இயக்­கத்­தில் பிரியா நடித்­துள்ள 'பிளட் மணி' திரைப்­ப­டம் நாளை வெளி­யீடு காண உள்­ளது. இந்­நி­லை­யில், இப்­படக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­த­னர்.

அப்­போது பேசிய படத்­தின் திரைக்­கதை ஆசி­ரி­யர் சங்­க­ர­தாஸ், மிக திற­மை­வாய்ந்த ஒரு குழு­வு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"இந்த கதை­யில் வரும் பெண் கதா­பாத்­தி­ரம் மிக­வும் வலு­வா­னது. அத்­த­கைய வேடத்­தில் பிரியா பவானி சங்­கர் நடிப்­பது எனக்கு மிகுந்த மன­நி­றை­வைத் தரு­கிறது. அவர் தாம் இயக்­கும் அனைத்து கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் அர்ப்­ப­ணிப்­பு­டன் நடிப்­ப­தைக் கவ­னித்து வரு­கி­றேன்.

"மேலும் ஷிரிஷ், கிஷோர் என இப்­ப­டத்­தில் அனை­வ­ருமே சிறப்­பாக நடித்­துள்­ள­னர்," என்றார் சங்­க­ர­தாஸ்.

பிரியா பவானி சங்­கர் பேசி­ய­போது, நன்றி என்ற வார்த்­தை­தான் அவ­ரால் அதிக முறை உச்­ச­ரிக்­கப்­பட்­டது. இந்­தப் படத்­துக்கு அவரை இயக்­கு­நர் நெல்­சன் தான் பரிந்­துரை செய்­தா­ராம். அவ­ரால்­தான் தமக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்­தது என்­றார்.

"நெல்­ச­னுக்கு மட்­டு­மல்ல, இந்­தப் படத்­தில் நடித்­ததை சிறந்த அனு­ப­வ­மாக மாற்­றிய இயக்கு­நர் சர்­ஜுனுக்கு நன்றி. ராமேஸ்­வ­ரத்­தில் கொளுத்­திய வெயி­லில் பல முக்­கிய காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னோம்.

"அத­னால் திரை­யில் தோன்­றும்­போது என் முகம் எப்­படி காட்­சி­ய­ளிக்­குமோ எனும் கவலை ஏற்­பட்­டது. ஆனால் என்னை மட்­டு­மல்ல, படத்­தில் நடித்த அனை­வ­ரை­யுமே மிக அழ­காக காட்­டி­யுள்­ளார் ஒளிப்­ப­தி­வா­ளர் பாலா. இதற்­கா­க­வும் அவர் காட்­டிய பொறு­மைக்­கா­க­வும் நன்றி சொல்ல வேண்­டும்.

"எங்­க­ளி­டம் அழ­கான கதை இருக்­கிறது. அதை உங்­க­ளுக்­கா­கக் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளோம். ரசி­கர்­க­ளின் ஆத­ரவு இருந்­தால் படம் பெரிய வெற்­றி­யைப் பெறும்.

"தமிழ் ரசி­கர்­கள் நல்ல படைப்­பு­களை ஆத­ரிக்­கத் தவ­றி­ய­தில்லை என்­பார்­கள். அதை நான் முழு­மை­யாக நம்­பு­கி­றேன்," என்­றார் பிரியா பவானி சங்­கர்.

இயக்­கு­நர் சர்­ஜுன் பேசு­கை­யில், ஓடிடி தளங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது நல்ல விஷ­யம் என்­றார். அவ­ரும் மறக்­கா­மல் பிரி­யாவைப் பாராட்­டி­னார்.

"பிரி­யா­வைப் பொறுத்­த­வரை இந்­தத் துறைக்கு ஏற்ற நிபு­ணத்­து­வம் கொண்­ட­வர். ஒரு­நாள் கூட அவர் படப்­பி­டிப்­புக்­குத் தாம­த­மாக வந்­தது கிடை­யாது. அதே­போல், தமக்கு அது வேண்­டும், இது வேண்­டும் என்­றெல்­லாம் தொல்லை தர­மாட்­டார்.

"படப்­பி­டிப்பு தளத்­தில் அமை­தி­யாக இருப்­ப­வர், தனக்­கான காட்சி பட­மாக்­கப்­ப­டும்­போது­தான் வாய் திறப்­பார். அவ­ரது மிகக் கச்­சித மான நடிப்பு படத்­துக்­குப் பலம் சேர்த்­துள்ளது," என்­றார் இயக்­கு­நர் சர்­ஜுன்.

கொரோனா நெருக்­கடி தங்­க­ளை­யும் பாதித்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், தயா­ரிப்­பா­ளர் இர்­பான் மாலிக், படம் முடி­யும் வரை ஒரு­முறை கூட சலிப்­ப­டை­யா­மல், நம்­பிக்கை இழக்­கா­மல் இருந்­த­தற்கு நன்றி தெரி­விப்­ப­தா­கக் கூறி­னார்.

இந்­தப் படம் முழு­நீள திகில் படைப்­பாக உரு­வாகி உள்­ளது. பிரியா முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தா­லும், மற்­ற­வர்­க­ளுக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

கிஷோர், ஷிரிஷ் தவிர பஞ்சு சுப்பு, 'ராட்­ச­சன்' வினோத் சாகர், ஸ்ரீலேகா ராஜேந்­தி­ரன் உள்­ளிட்ட மேலும் பலர் உள்­ள­னர்.

"திகில் படம் என்­ப­தால் பின்­னணி இசை மிக­வும் முக்­கி­யம். அந்­தப் பணியை இசை­அமைப்­பா­ளர் சதீஷ் ரகு­நந்­தன் எந்­தக் குறை­யும் இன்றி செய்­துள்­ளார். அவ­ரது இசை ஒவ்­வொரு காட்­சி­யை­யும் விறு­வி­றுப்­பாக நகர்த்­திச் செல்ல உதவி இருக்­கிறது. அனை­வ­ரும் பொறுப்பை உணர்ந்து, அர்ப்­ப­ணிப்­பு­டன் உழைத்­துள்­ளோம்.

"படம் இன்­றைய இளம் தலை­மு­றை­யினரை மட்­டு­ம் அல்­லா­மல் அனைத்து தரப்­பி­ன­ரை­யும் கவ­ரும் வகை­யில் நல்ல படைப்பாக இருக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர் சர்ஜுன்.