'அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படும் கதை'

'அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படும் கதை'

2 mins read
aa23bbda-360b-4ed1-ab02-dba1b7a546dc
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் ஒரு காட்சி. -

''சில நேரங்­களில் சில மனி­தர்­கள்' என்ற தலைப்­பில் புதுப்­ப­டம் உரு­வாகி வரு­கிறது. அறி­முக இயக்­கு­நர் விஷால் வெங்­கட் இயக்­கு­கி­றார்.

வெவ்­வேறு சமூ­கச் சூழ்­நிலை களில் உள்ள நான்கு பேர், தெரிந்தோ தெரி­யா­மலோ ஒரு சம்­ப­வத்­தில் சம்­பந்­தப்­ப­டு­கி­றார்­கள். அந்­தச் சம்­ப­வம் அவர்­கள் வாழ்க்­கை­யில் என்ன மாற்­றத்­தைக் கொண்டு வரு­கிறது, எந்த வகை­யில் பாதிக்­கிறது என்­ப­து­தான் கதை. இதில் அசோக் செல்­வன் நாய­க­னா­க­வும் 'பிக்­பாஸ்' ரித்­விகா முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடித்­துள்­ள­னர்.

இந்­தத் தலைப்பை வைப்­ப­தற்கு காலஞ்­சென்ற எழுத்­தா­ளர் ஜெய­காந்­த­னின் குடும்­பத்­தார் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். இதே தலைப்­பில்­தான் அவர் தனது மிகச்­சி­றந்த படைப்பை வழங்­கி­யுள்­ளார்.

ஜெய­காந்­த­னின் இந்த நாவ­லுக்­கும் தனது படத்­துக்­கும் எந்­த­வித தொடர்­பும் இல்லை என்­கி­றார் விஷால் வெங்­கட்.

"இன்­றைய தலை­மு­றைக்கு அழுத்­தம் திருத்­த­மாக ஒரு கதை­யைச் சொல்ல விரும்­பி­னேன். 'சில நேரங்­களில் சில மனி­தர்­கள்' என்ற தலைப்பு என் கதைக்­குப் பொருத்­த­மாக இருந்­தது.

"இது கதா­பாத்­தி­ரங்­க­ளின் வழியே போகும் கதை. ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மைக்கு ஏற்ப கதை நக­ரும். இவர்­கள் வானத்­தில் இருந்து குதித்­த­வர்­கள் அல்ல. நம் அன்­றாட வாழ்க்­கை­யில் சந்­திப்­ப­வர்­கள், நம் நண்­பர்­க­ளைப் போன்­ற­வர்­கள். நம் அண்டை வீட்­டுக்­கா­ர­ரா­க­வும் இருக்­க­லாம். சில சம­யம் நம் முகத்தை கண்­ணா­டி­யில் பார்க்­கும் உணர்­வும் ஏற்­படும்," என்­கி­றார் விஷால் வெங்­கட்.

அசோக் செல்­வன், மணி­கண்­டன், கே.எஸ்.ரவிக்­கு­மார், பானு ப்ரியா என அனை­வ­ருமே கச்­சி­த­மான நடிப்பை வழங்கி இருப்­ப­தா­கச் சொல்­ப­வர், கதைக்­கேற்ற ஒளிப்­ப­தி­வா­ளர், இசை­ய­மைப்­பா­ளர் அமைந்­தது கூடு­தல் பலம் சேர்த்­துள்­ளது என்­கி­றார்.

"அசோக் செல்­வன் நிறைய ரசிகை­க­ளைக் கொண்­டி­ருப்­ப­வர். நடி­கர் நாச­ரின் மகன் அபி­ஹா­சன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கிறார். 'ஜெய்­பீம்' படத்­துக்­குப் பிறகு மணி­கண்­டன் இன்­னும் பளிச்­சென்று தெரி­கி­றார்.

"ரெயா, அஞ்சு குரி­யன், இள­வ­ரசு என அனு­ப­வத்­தில் சிறந்­த­வர்­கள் இருக்­கி­றார்­கள். கன­வு­கள், உற­வு­கள், பிரி­வு­கள் என வந்து சேர்­கிற துய­ரங்­கள், நாமா­கத் தேடிக்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளும் கதா­பாத்­தி­ரங்­க­ளாக இவர்­கள் வாழ்ந்து காட்­டி­யுள்­ள­னர்."

தலைப்பு மாற வாய்ப்புண்டா?

"இப்­போ­து­தான் அந்த எதிர்ப்பு எங்­கள் கவ­னத்­திற்கு வந்­தி­ருக்­கிறது. இதைப் பற்றி யோசிக்க இன்­னும் அவ­கா­சம் தேவைப்­ப­டு­கிறது. ஆனால், பெயர் தவிர அந்த நாவ­லுக்­கும் படத்­தின் கதைக்­கும் துளி­யும் தொடர்பு கிடை­யாது," என்­கி­றார் விஷால் வெங்­கட்.

, :   