அம்மாவுடன் கொண்டாடும் அமலா

அம்மாவுடன் கொண்டாடும் அமலா

1 mins read
4848cde8-5b0e-472d-9c75-dbebcb292f60
தாயார், பாட்டியுடன் அமலா பால். -

'தொடக்­க­மும் முடி­வும் இல்லா பண்­டிகை' என கிறிஸ்­து­மஸ் பற்றி குறிப்­பி­டும் அமலா, தன் அம்­மா­வு­டன்­தான் இப்­பண்­டி­கையைக் கொண்­டா­டு­வார்.

அம­லா­வின் வாழ்­வில் கிறிஸ்­து­மஸ் பண்­டிகை மிக முக்­கி­ய­மா­னது. இயக்­கு­நர் ஏ.எல்.விஜய் மீது அவ­ருக்­குக் காதல் வரக் கார­ணமே இப்பண்­டி­கை­தான்.

ஒரு சம­யம் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்­திற்­காக அமலா இத்­தாலி சென்­றி­ருந்­தார். அங்கே உலக கிறிஸ்­த­வர்­க­ளின் தலை­ந­க­ரம் எனப்­படும் வாடி­கன் நக­ரில் உள்ள தேவா­ல­யத்­தின் மாடத்­தில் இருந்து பொது­மக்­களுக்கு போப் ஆண்­ட­வர் ஆசி வழங்­கிக் கொண்­டி­ருந்­தார்.

அப்­போது அம­லா­வும் ஆசி பெற்­று­விட்டு, ஓர் உய­ர­மான இடத்­தி­லி­ருந்து கூட்­டத்தை சுற்­றிப் பார்த்­த­போது, அங்கே அமலா­வைப் பார்த்­த­படி விஜய் நின்­றி­ருந்­தார். பிற­கென்ன, நெகிழ்ந்து­போ­னார் அமலா.

இந்த ஜோடி விரை­வி­லேயே திரு­ம­ணம் செய்து, மிக விரை­வி­லேயே பிரிந்­தது சோகம்­தான். எனினும் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்தை அவர் தவ­ற­விடுவதே இல்லை.