சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஆங்கிலோ-இந்திய வம்சாவழிப் பெண்ணான சமந்தா, தென்னிந்தியாவின் இன்றைய முக்கிய நடிகை.
அதிகம் சம்பாதிக்கும் இந்த அழகு நடிகை, தனது அறக்கட்டளை மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இருதய நோய் அறுவை சிகிச்சைக்கான செலவுகளை ஏற்று நிறைய குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.
கிறிஸ்துமஸ் நாளில் தனது தோழமை வட்டத்துடன் கோவா சென்று கொண்டாடுவார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்றைய தினம் விருந்துணவுக்கும் ஏற்பாடு செய்வார்.
கடந்த சில ஆண்டுகளாக தன் காதல் கணவருடன் கொண்டாடிய சமந்தா, மீண்டும் தோழிகளுடன் இணைந்துவிட்டார்.
தற்போது கணவரைப் பிரிந்துவிட்டாலும்கூட , கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
நடிகைகள் ரெஜினா, வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உட்பட மேலும் சில நடிகைகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற தருணங்களைக் கொண்டாடத் தவறுவதில்லை.
தங்களால் இயன்ற அளவு நலிந்தோர்க்கு உதவிகள் செய்கின்றனர்.
மேலும், தங்களது கிறிஸ்தவ தோழிகளுக்கும் திரையுலகத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்து மகிழ்கிறார்கள்.
கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டவில்லை. ஆனால், இந்த ஆண்டு புது படங்கள் வெளியாகிய நிலையில் திரையுலகத்தினரிடம் உற்சாகம் கூடியுள்ளது.

