அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சியில் வென்ற விஜயலட்சுமிக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்துவிட்டதாக இணையவாசிகள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
அதுபற்றி விஜயலட்சுமி கூறுகையில், "எனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் வரவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தம் ஆகும்போதே நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பணம் வரும் என்று கூறினார்கள். மேலும் காசு வாங்கிக்கொண்டு என்னைப்பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதி வருகின்றனர்," என்று
குற்றம் சாட்டியுள்ளார் விஜய
லட்சுமி.

