ரசிகர்களைக் கவர்ந்துள்ள 'உள்ளம் உருகுதய்யா' பாடல்

ரசிகர்களைக் கவர்ந்துள்ள 'உள்ளம் உருகுதய்யா' பாடல்

1 mins read
f125f5d6-9e96-4e78-ae73-0630399c5c14
-

'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தின் இரண்­டா­வது பாடல் வெளி­யாகி உள்­ளது. 'உள்­ளம் உரு­கு­தய்யா...' என்று தொடங்­கும் அந்­தப் பாட­லுக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் சூர்யா நடிக்­கும் இந்­தப் படத்­தில் அவ­ரது ஜோடி­யாக பிரி­யங்கா அருள் மோகன் நடிக்­கி­றார். மேலும், சத்­ய­ராஜ், சரண்யா பொன்­வண்­ணன், தேவ­தர்­ஷினி, இள­வ­ரசு, சுப்பு பஞ்சு உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

'சன் பிக்­சர்ஸ்' நிறு­வ­னம் தயா­ரிக்­கும் படம் என்­ப­தால் அதி­க­மான திரை­ய­ரங்­கு­களில் இப்­ப­டம் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எதிர்­வ­ரும் பிப்­ர­வரி 4ஆம் தேதி வெளி­யீடு காண உள்ள நிலை­யில், இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள 'வாடா தம்பி...' என்ற பாடல் ஏற்­கெ­னவே வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்ள சண்­டைக்­காட்­சி­களில் சூர்யா அசத்­த­லாக நடித்­துள்­ளாராம்.