'இது அனைவருக்குமான படம்'

'இது அனைவருக்குமான படம்'

3 mins read
42edc5b2-76c3-444e-8ce0-a5485ea3f84f
-

'மாயோன்' திரைப்­ப­டம் ஆறு முதல் அறு­பது வயது வரை உள்ள அனை­வ­ருக்­கும் ஏற்ற பட­மாக இருக்­கும் என்­கி­றார் அறி­முக இயக்­கு­நர் எம்.கிஷோர்.

தலைப்­பைக் கேட்­ட­வு­டன் இது பக்­திப்­ப­டம் என நினைத்து ஏமாற வேண்­டாம் என்­றும் கேட்­டுக்­கொள்­கி­றார்.

அண்­மை­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் தினத்­தை­யொட்டி அவர்­களும் புரிந்து, உணர்ந்­து­கொள்­ளும் வகை­யில் இப்­ப­டத்­தின் குறு முன்­னோட்­டக் காட்­சித்­தொ­குப்பு வெளி­யா­னது. இந்த வித்­தி­யா­ச­மான முயற்­சிக்குப் பல­ரது பாராட்­டு­களும் கிடைத்­தது.

"மாயோன்' என்­பது சங்க இலக்­கி­யப் பெயர். சங்க காலத்­தில் வாழ்ந்த தமி­ழர்­கள் தாங்­கள் வாழ்ந்த நிலத்தை 'குறிஞ்சி', 'முல்லை', 'மரு­தம்', 'நெய்­தல்', 'பாலை' என்று ஐந்து வகை­யா­கப் பிரித்­த­னர். முல்லை நிலப் பகு­தி­யின் இறை­வன் மாயோன். அதா­வது திரு­மால்.

"இது கிருஷ்­ணர் கோவில் பின்­ன­ணி­யில் நடக்­கும் கதை. மாலை ஆறு மணிக்கு மேல் அந்­தக் கோவி­லில் சில அமா­னுஷ்ய விஷ­யங்­கள் நடக்­கின்­றன. அந்­தக் கோவிலை மைய­மாக வைத்து தொல்­பொ­ருள் ஆராய்ச்­சி­யும் நடக்­கிறது. கோவில், திரு­மால், தொல்­பொ­ருள் ஆராய்ச்சி என்று கதை­யில் பழமை நிறைந்­தி­ருந்­த­தால் 'மாயோன்' என்ற தலைப்பை வைத்­தோம்," என்­கி­றார் இயக்­கு­நர் கிஷோர்.

ஐந்­தா­யி­ரம் வருட பழைமை வாய்ந்த கிருஷ்ணர் கோவி­லில் சிறப்பு வழி­பாடு நடக்­கிறது. அப்­போது விநோ­த­மான சம்­ப­வங்­கள் நடப்­பதை அறிந்து ஆராய்ச்­சிக்­காக நாய­கன் சிபி­ரா­ஜும் அவ­ரது குழு­வி­ன­ரும் அங்கு வரு­கி­றார்­கள்.

அவர்­கள் எதிர்­பா­ராத வகை­யில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளால் மிரண்டு போவார்­க­ளாம். சில சிக்­கல்­களி­லும் சிக்­கிக்­கொள்­வார்­க­ளாம். அதில் இருந்து எப்­படி மீண்டு வரு­கி­றார்­கள் என்­ப­து­தான் இப்­படத்­தின் கதை.

"கதை­யின் பின்­ன­ணி­யில் சிலைக்­க­டத்­தல் குறித்­தும் விரி­வா­கச் சொல்லி இருக்­கி­றோம். மொத்­தத்­தில், தெய்­வீ­க­மும் சாக­சங்­களும் கலந்த திகில் கதை இது. கதை தயா­ரா­ன­தும் இளை­ய­ராஜா சாரி­டம்­தான் முத­லில் சென்­றேன். அவ­ரைத் தவிர வேறு யாரா­லும் இந்­தக் கதைக்குப் பொருத்­த­மான இசையை வழங்க முடி­யாது.

"ராஜா சார் நான் சொன்ன கதை­யைப் பொறுமை­யா­கக் கேட்­டார். அதன் முடி­வில் அவர் இசையமைக்­கச் சம்­ம­தித்­த­தும்­தான் நிச்­ச­ய­மாக இது நல்ல கதை என்­பது எனக்கே புரிந்­தது.

"கதைக்­குப் பொருத்­த­மான நாய­கன் என்று யோசித்­த­போது, சிபி­ராஜ் நடித்­தால் நன்­றாக இருக்­கும் எனத் தோன்­றி­யது. மேலோட்­ட­மாக அவ­ரி­டம் கதை­யைச் சொன்­ன­தும் ஆர்­வ­மா­னார். பிறகு இரண்டு மணி நேரம் கேட்ட பிறகு ராஜா சார் இசை­ய­மைப்­பது குறித்து தெரி­வித்­தேன். சிபி­யின் ஆர்­வம் மேலும் அதி­க­மா­னது. 'ராஜா சார் இசை­யில் நடிக்க வேண்­டும் என்­பது என் கனவு. இது­தான் அவ­ரு­டன் எனக்கு முதல் படம்' என்று படத்­தோடு ஐக்­கி­ய­மா­கி­விட்­டார்.

சிபி இதில் அர்­ஜுன் மணி­மா­றன் என்ற அகழ்­வா­ராய்ச்சிக் குழு­வின் தலை­வ­ராக நடித்­துள்­ளார்.

"நாய­கி­யாக தான்யா ரவிச்­சந்­தி­ரன் நடித்­துள்­ளார். அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் அஞ்­சனா. கல்­வெட்­டு­க­ளைப் படிக்­கக்­கூ­டிய நிபு­ணர் கதா­பாத்­தி­ரத்­து­டன் கச்­சி­த­மா­கப் பொருந்தி உள்­ளார்.

"தொல்­பொ­ருள் துறை­யில் சிலை­கள் ஆய்வு, ஓவிய ஆய்வு, சிதி­ல­மடைந்த பொருள்­க­ளின் ஆயு­ளைக் கண்டு­பி­டிப்­பது, கல்­வெட்டு ஆய்வு என்று பல்­வேறு பிரி­வு­கள் உள்­ளன. அதில் ஒன்று­தான் கல்­வெட்­டு­க­ளைப் படிப்­பது. இந்த விவ­ரங்­களை எல்­லாம் விரி­வா­கக் கேட்­டுக்­கொண்­ட­து­டன், தான்­யா­வும் தன் பங்­குக்கு சில விவ­ரங்­க­ளைச் சேக­ரித்து, அவற்றை மன­தில் வைத்து நடித்­தார். அவ­ரது இந்த அக்­க­றையை மொத்த படக்­கு­ழு­வும் பாராட்­டி­யது," என்கிறார் கிஷோர்.

, :   

தான்யா