முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் இளையராஜா. அப்படத்தின் நாயகனாக ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் இயக்குநர் பால்கி, இளையராஜாவின் தீவிர ரசிகர். அண்மையில் இவர் ரஜினியைச் சந்தித்து ஒரு கதையைக் கூறியதாகவும், அது ரஜினிக்குப் பிடித்துப்போனதாகவும் கூறப்படுகிறது.
இத்தகவலை பால்கி இளையராஜாவிடம் தெரிவிக்க, அந்தப் படத்தை தாமே தயாரிக்க முன்வந்துள்ளாராம் இளையராஜா.
'அலைகள் ஓய்வதில்லை', கோழி கூவுது, கொக்கரக்கோ, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன் உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார் இளையராஜா.
கடைசியாக கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான 'வீரா' படத்தில் அவர் ரஜினியுடன் இணைந்து பணியாற்றினார். இதையடுத்து, 28 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ரஜினி படத்துக்கு இசையமைக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

