ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' ('ஆர்ஆர்ஆர்') படத்துக்காக ரத்தம் சிந்தி உழைத்துள்ளனர் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், படத்தின் நாயகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரையும் புலி அல்லது சிங்கம் எனக் குறிப்பிடலாம் என்று நகைச்சுவையாகப் பேசினார்.
"அந்த அளவுக்கு இருவரும் திரையில் மிரட்டலாக நடித்துள்ளனர். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தர ஏராளமானோர் ரத்தம் சிந்தினார்கள் எனில், இந்தப் படத்துக்காகவும் பலர் ரத்தம் சிந்தி உள்ளனர்.
"இப்படத்தை திரையரங்கில் பார்ப்பதே நல்ல கலைஞர்களுக்கு நாம் தரும் மரியாதை," என்றார் சிவகார்த்திகேயன்.

