'புஷ்பா' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடனமாட சமந்தா தயங்கியதாக அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
எனினும், தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டு சமந்தா நடித்ததாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
அந்தப் பாடல் இணையத்தில் இதுவரை சுமார் நூறு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
"பாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் கூறியதை நம்பினார். இப்போது அதே பாடல் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது," என்றார் அல்லு அர்ஜுன்.
இந்நிலையில், அவரது இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு, 'இனி எப்போதும் உங்களை நம்புவேன்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சமந்தா. அப்பதிவிற்கு இதயம் போன்ற 'எமோஜி'யைப் பின்னூட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.

