ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய வீரப் பெண்மணி வேலு நாச்சியார் வரலாற்றை திரைப்படமாக்க உள்ளார் இயக்குநர் சுசி கணேசன். தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகாராணி வேலுநாச்சியரின் வீர வாழ்க்கை வரலாறு உலக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று இவர் கூறியுள்ளார். "வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுவதை பெருமையோடு அறிவிக்கி றேன். இந்திய பிரதமர் மோடி, வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியது படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது. இப்படத் தின் மூலம் ஆங்கிலேயரோடு போரிட்டு வென்ற, முதலும் கடைசி யுமான வீரத் தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன் றைய தலைமுறைக்குக் கொண்டுபோய் சேர்ப்பதோடு, உலகத்தையே கொண்டாட வைத்துவிடலாம்," என்கிறார் சுசி கணேசன்.
வேலு நாச்சியார் வரலாறு திரைப்படமாகிறது
1 mins read
-

