'காத்து வாக்குல 2 காதல்'

'காத்து வாக்குல 2 காதல்'

3 mins read
e6128fbd-dc7a-4a24-ba6d-4e9bc77b9ace
-

'காத்து வாக்­குல ரெண்டு காதல்' திரைப்­ப­டம் விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது. தனது காத­லர் விக்­னேஷ் சிவன் இயக்­கத்­தில் நயன்­தாரா நடித்­தி­ருப்­பது, விஜய் சேது­பதி நாய­க­னாக அசத்தி இருப்­பது, நயன்­தா­ரா­வுக்கு இணை­யான கதா­பாத்­தி­ரத்­தில் சமந்தா நடித்­தி­ருப்­பது உள்­ளிட்ட அம்­சங்­கள் இந்­தப் படம் மீதான எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

விக்­னேஷ் சிவ­னி­டம் பேசி­னால் இந்­தப் படத்­துக்கு இயக்­கு­ந­ராக தாம் எவ்­வ­ளவு முக்­கி­யமோ, அதேபோன்று இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத்­தும் முக்­கி­யம் என்­கி­றார். படத்­தில் ஏழெட்டு பாடல்­கள் இடம்­பெற்­றுள்­ள­ன­வாம்.

"ஒரு மனி­த­னுக்கு இரண்டு பெண்­கள் மீது உண்­மை­யா­கவே காதல் ஏற்­ப­டுமா, அந்­தக் காத­லின் அடுத்­த கட்­டம் என்­ன­வாக இருக்­கும், அந்­தக் காதல் எங்கு போய் முடி­யும் எனப் பல்­வேறு கேள்­வி­கள் எழும். இந்­தக் கேள்­வி­களும் அவற்­றுக்­கான பதில்­க­ளும்­தான் இந்­தப் படம்," என்­கி­றார் விக்னேஷ் சிவன்.

தமிழ் சினி­மா­வில் இது­வரை யாரும் தொட்­டுப் பார்க்­காத கதை இது என்று குறிப்­பி­டு­ப­வர், முன்­னு­தா­ர­ணம் இல்­லா­த­தால், படத்தை முழு­மை­யாக எடுத்து முடிக்­கும் வரை எப்­படி இருக்­கும் என்­பதை தோரா­ய­மாக அனு­மா­னித்து வேலை பார்க்க வேண்­டி­யி­ருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

படத்­தின் தலைப்பே கதை­யைச் சொல்­வது போல் இருப்­ப­தாக சிலர் சுட்­டிக்­காட்­டி­ன­ராம். 'அத­னால் பர­வா­யில்லை' என்­கி­றார் விக்­னேஷ்.

கார­ணம், இது­போன்ற படங்­களை, கதை தெரிந்த பிற­கும் முழு­மை­யா­கப் பார்க்­கும் ஆர்­வம் உள்ள ரசி­கர்­கள் இன்­ற­ள­வும் பர­வ­லாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு­வ­ருக்கு இரண்டு பெண்­கள் மீது காதல் என்­பது சிக்­க­லான விஷ­யம்­தான். நடை­மு­றை­யில் எளி­தில் சாத்­தி­ய­மல்ல. மேலும், இரண்­டரை மணி நேரம் படம் பார்க்க வைக்க வேண்­டும். அது ஒரு சவால்.

"இரண்டு பெண்­களை ஓர் ஆண் காத­லிக்­கி­றார் என்று சொல்­லும்­போது சில­ருக்கு வக்­கி­ர­மா­கத் தோன்­றக்­கூடும். அத­னால் இந்­தக் கதையை சுவா­ர­சி­ய­மாக மட்­டு­மல்­லா­மல், கவ­ன­மா­க­வும் சொல்ல வேண்­டி­யி­ருந்­தது. இப்­படி பல சிக்­கல்­க­ளை­யும் சவால்­க­ளை­யும் எதிர்­கொண்டு இந்­தப் படத்தை உரு­வாக்கி இருக்­கி­றோம்," என்று குறிப்­பி­டும் விக்­னேஷ் சிவன், இதுபோன்ற கதைக்கு சேது­பதி போன்ற ஒரு நாய­கன் இல்லாமல் திரைப்பட­மாக்க இய­லாது என்­கி­றார்.

கதா­நா­ய­கன் சேது­பதி, சமந்தா, நயன்­தாரா ஆகிய மூவ­ருக்­கும் இடை­யே­யான உடல் மொழி­தான் இந்­தப் படம் என்று கூறு­ப­வர், மூவ­ருமே தங்­கள் பங்­க­ளிப்பை மிகச் சிறப்­பாக வழங்கி உள்­ள­தா­கப் பாராட்­டு­கி­றார்.

"முத­லில் சமந்­தா­வைப் பாராட்ட வேண்­டும். அவ­ரது தோற்­றம், நடிப்பு, வேலை மீதான அர்ப்­ப­ணிப்பு எல்­லாமே பாராட்­டப்­பட வேண்­டி­யவை. தனது ஒரு பார்­வை­யால் மொத்த காட்­சி­யை­யும் தன்­வ­சம் இழுத்­து­வி­டு­வார். அவ­ரி­டம் உள்ள சிறப்பு அம்­சங்­களில் இருந்­தும் நமக்­குத் தேவை­யா­னதை எடுத்­துக்­கொள்­ள­லாம்.

"அள­வாக, இயல்­பாக நடிப்­ப­தற்கு சமந்­தா­தான் நல்ல உதா­ர­ணம். அத­னால்­தான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழி­களில் அவ­ரால் நடிக்க முடி­கிறது. முன்­னணி நடி­கை­யா­க­வும் இருக்க முடி­கிறது.

"இந்­தப் படத்­தில் சேது­பதி, சமந்தா, நயன்­தாரா மூவ­ருக்­குமே சரி­வி­கித முக்­கி­யத்­து­வம் இருக்­கும். இந்த மூவ­ரின் கூட்­டணி ரசி­கர்­க­ளுக்கு நிச்­ச­யம் பிடிக்­கும்," என்­கி­றார் விக்­னேஷ் சிவன்.

சேது­பதி நடிப்பு எப்­படி?

"நான் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. இந்­தப் படத்­தின் நாய­கன் கதா­பாத்­தி­ரத்­துக்கு அவ­ரைத் தவிர வேறு யாரை­யும் நினைத்­துப் பார்க்­கவே முடி­ய­வில்லை. இந்த பாத்­தி­ரத்­துக்கு ஒரு நடி­கர் என்­ப­தைக் கடந்து, அதை முழு­மை­யாக உள்­வாங்­கும் ஆற்­றல் தேவை.

"இரு பெண்­களை நாய­கன் காத­லிப்­பது தவ­றான ஒன்­றல்ல என்ற எண்­ணத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அந்த நடிப்பு அமையவேண்­டும். இதைக் கச்­சி­த­மா­கச் செய்­துள்­ளார் சேது­பதி. அவ­ரது தனித்­தன்­மை­யான நடிப்­பு­தான் அவ­ருக்­கும் படத்­துக்­கும் பலம். ஒவ்­வொரு காட்­சி­யி­லும் அவ­ரி­டம் இருந்து எதிர்­பா­ராத ஒன்று வெளிப்­படும். சேது சார் 'சூப்­பர்'."

நயன்­தாரா என்ன சொல்­கி­றார்?

"இந்­தக் கதை­யை­யும் வச­னங்­களை­யும் நூறு முறை­யா­வது நான் சொல்ல கேட்­டி­ருப்­பார். ஆனால், படப்­பி­டிப்­பின்­போது ஏதோ அப்­போது­தான் புதி­தாக கேட்­ட­து­போல் ரசித்து நடிப்­பார். இதைத்­தான் நிபு­ணத்­து­வம் என்­கி­றார்­கள். அவ­ரது நடிப்­பால் மொத்­தக் காட்­சி­யும் அழ­கா­கி­வி­டும்," என்­கி­றார் விக்­னேஷ் சிவன்.