'ஆலம்பனா': இது பூதம் பற்றிய ஜாலியான கதை

'ஆலம்பனா': இது பூதம் பற்றிய ஜாலியான கதை

2 mins read
ddfae8fc-f7a2-4adb-be8c-7b9c82c03230
'ஆலம்பனா' படத்தில் வைபவ், பார்வதி. -

வைபவ் நடிப்­பில் அடுத்து வெளி­யா­கும் படம் 'ஆலம்­பனா'. 'டாக்­டர்' வெற்­றிக்­குப் பிறகு கே.ஜே.ஆர்.ராஜேஷ் தயா­ரிக்­கும் படம். பாரி.கே.விஜய் இயக்­கு­கி­றார். இது பூதம் பற்­றிய கதை­யாம்.

"ஒரு­முறை ரஜினி, கமல் நடித்த 'அலா­வு­தீ­னும் அற்­புத விளக்­கும்' படத்­தைப் பார்த்­துக்கொண்­டி­ருந்­தேன். அதில் பழம்­பெ­ரும் நடி­கர் அசோ­கன் பூத­மாக நடித்­தி­ருப்­பார். அடிக்­கடி 'ஆலம்­பனா... ஆலம்­பனா...' என்று சொல்­லிக்­கொண்டே இருப்­பார். அது என்­னு­டைய கதைக்­குப் பொருத்­த­மாக இருந்­தது.

"நான் எதிர்­பார்த்­த­ப­டியே தலைப்பை அறி­வித்­த­தும் நல்ல வர­வேற்பு கிடைத்­தது. இது முழு­நீள நகைச்­சுவை கதை. அதில் குடும்ப உணர்­வு­கள், நகைச்­சுவை என பல விஷ­யங்­கள் கலந்­தி­ருக்­கும்.

"இந்­தக் கதைக்கு சாக­சங்­கள் புரி­யும் நாய­கன் தேவைப்­ப­ட­வில்லை. கதைக்­கேற்ற, அமை­தி­யான நாய­கன் என்று முடி­வா­ன­தும் முத­லில் விஷ்ணு விஷாலை அணுகி­னோம். அவ­ரும் இதில் நடிக்க ஆர்­வ­மாக இருந்­தார். ஆனால், கால்­ஷீட் பிரச்­சி­னை­யால் அவ­ரால் நடிக்க முடி­யா­மல் போனது.

"அதன்­பி­றகு வைபவ் நினை­வுக்கு வந்­தார். அறி­முக இயக்­கு­நர் என்­றா­லும், அவர் கொடுத்த ஒத்­து­ழைப்பு பாராட்ட வேண்­டிய ஒன்று.

"ஒரு­முறை தொடர்ந்து 72 மணி நேரம் படப்­பி­டிப்பு நடத்­தி­னோம். கொஞ்­ச­மும் முகம் சுளிக்­கா­மல் நடித்­தார். ஒரு நண்­ப­ரைப் போல் பழ­கிய, பணி­யாற்­றிய அனு­ப­வத்தை எனக்­குத் தந்­துள்­ளார்.

"முனீஸ்­காந்த் தான் இந்­தப் படத்­தில் பூதம். அவர் எனது ஆரம்ப கால நண்­பர். எனக்­காக வாய்ப்பு தேடிய நல்ல உள்­ளங்­களில் ஒரு­வர்.

"கதை எழு­தும்­போதே அவர்­தான் பூதம் கதா­பாத்­தி­ரத்தை ஏற்­பார் என முடிவு செய்­தேன். அவ­ரி­டம் ஒப்­பு­த­லும் வாங்­கி­விட்­டேன்.

"அவர் கொடுத்த ஒத்­து­ழைப்பை விவ­ரிக்க வார்த்­தை­களே இல்லை. ஏனெ­னில், பூதம் கதா­பாத்­தி­ரத்­துக்­கான உடை­களை அணிந்­து­கொண்டு, ஒப்­ப­னை­யு­டன் பல மணி­நே­ரம் நடிப்­பது நெருப்பு மேல் நிற்­பது போன்­றது. இருப்­பி­னும், தனது சிர­மத்தை வெளிக்­காட்­டா­மல் நடித்­தார்.

"ஆனந்­த­ராஜ், காளி வெங்­கட், ரோபோ சங்­கர் ஆகி­யோ­ரின் நடிப்பு சிரிப்பை வர­வ­ழைக்­கும் என்­ப­தற்கு இப்­போதே உத்­த­ர­வா­தம் தரு­கி­றேன்," என்­கி­றார் பாரி.கே.விஜய்.