'கனவில் வருவது நிஜத்திலும் நடக்கிறது'

2 mins read
eb7cb11d-9a0a-4b8a-a44e-3c3be81a3aaa
'கார்பன்' படத்தில் விதார்த், தன்யா. -

'கார்­பன்' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் உரு­வாகி வரும் படத்­தில் நடித்­துள்­ளார் விதார்த். அவ­ரது ஜோடி­யாக நடிக்க கன்­ன­டத்­தில் இருந்து தன்யா என்­ப­வரை இறக்­கு­மதி செய்­துள்­ள­னர்.

'கார்­பன்' என்­றால் பிரதி எடுப்­பது என்­று­தான் நம்­மில் பலர் புரிந்து­கொள்­வோம். அதற்­கும் இந்­தப் படத்­தின் கதைக்­கும் என்ன தொடர்பு இருக்­கிறது என்­பதை வெளிப்­ப­டுத்­தவே இப்­படி ஒரு தலைப்பை தேர்வு செய்­த­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் சீனி­வாசன்.

இதற்கு முன்பு, விஜய் ஆண்­டனியை வைத்து 'அண்­ணா­துரை' படத்தை இயக்­கி­ய­வர். இம்­முறை வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளத்­து­டன் கள­மி­றங்­கி­யுள்­ளார்.

"படத்­தின் நாய­க­னுக்கு அடிக்கடி சில கன­வு­கள் வரு­கின்­றன. அவை அனைத்­தும் நிஜத்­தி­லும் நடக்­கின்றன. இந்­நி­லை­யில், தன் தந்தை விபத்தில் சிக்­கு­வ­து­போல் கனவு காண்­கிறார். அதைத்­த­டுக்க மேற்­கொள்­ளும் முயற்­சி­கள் பலனளிக்­கா­மல் போகி றது. விபத்தை ஏற்­ப­டுத்­தும் வாக­னம் மட்­டும் அவ­ரது மன­தில் நன்கு பதி­வா­கி­வி­டு­கிறது. தந்­தைக்கு உரிய சிகிச்சை அளித்­துக் காப்­பாற்ற பெருந்­தொகை தேவைப்­பட, விபத்து ஏற்­படுத்­தி­ய­வரை கண்­டு­பி­டித்­தால்­தான் சிக்­கல் தீரும் என்ற நிலை.

"வாழ்க்­கை­யில் கடந்து போன நாளை மீண்­டும் வர­வ­ழைப்­பது நடக்­காத ஒன்று. பத்து நொடி­கள் கனவு நீடித்­தி­ருந்­தால் என்­ன­வாகி இருக்­கும் என்ற கேள்­வி­யை­யும் கலைந்த கனவை வர­வ­ழைக்க நடக்­கும் போராட்­டத்­தை­யும் சுவா­ர­சி­ய­மான திரைக்­க­தை­யு­டன் திரை­யில் விவ­ரித்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் இயக்­கு­நர் சீனி­வா­சன்.

இந்­தப் படத்­தின் நாய­கன் அமை­தி­யான குணா­தி­ச­யம் கொண்­ட­வன் என்­ப­தால், விதார்த் தான் பொருத்­த­மாக இருப்­பார் எனக் கரு­தி­னா­ராம். கதை­யைக் கேட்ட விதார்த்­தும் இதில் நடிக்க தயக்­க­மின்றி ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

"இது அவ­ருக்கு 25வது படம். ஒவ்­வொரு காட்­சி­யி­லும் அவ­ரது நடிப்பு ரசி­கர்­க­ளின் அனு­தா­பத்தை அள்­ளும் வித­மாக, மிக யதார்த்­த­மாக இருந்­தது. தனக்­கான பாத்­தி­ரத்­து­டன் கச்­சி­த­மா­கப் பொருந்தி உள்­ளார். தன் சினிமா அறிவை வெளிப்­ப­டுத்த முயற்சி செய்­யா­மல், நாம் எதிர்­பார்ப்­பதை மட்­டும் கொடுக்­கி­றார். அந்த வகை­யில் அவரை இயக்­கு­ந­ரின் கதா­நா­ய­கன் என்று சொல்­ல­லாம்.

"தெலுங்­கி­லும் கன்­ன­டத்­தி­லும் சில படங்­களில் நடித்­துள்­ளார் நாயகி தன்யா. இந்­தப் படத்­தில் அவ­ரது கதா­பாத்­தி­ரம் இடை­வேளை­யில்­தான் அறி­மு­க­மா­கும். தமிழ் ரசி­கர்­க­ளுக்கு ஒரு புது நாய­கியை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளோம் என்­பதை­விட, திற­மை­யான நாய­கி­யைத் தந்­துள்­ளோம் என்­பதே சரி," என்கிறார் சீனி­வா­சன்.