மகிமா: நடுங்கும் குளிரில் அழ வைத்தனர்

மகிமா: நடுங்கும் குளிரில் அழ வைத்தனர்

3 mins read
47081f77-03d5-488a-ada5-44cec865f1b7
-

திரைப்­ப­டங்­களில் இடம்­பெ­றும் சில காட்சி­கள் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவ­ரும். மிகுந்த உற்­சா­க­த்தையும் அளிக்­கும். ஆனால் அதன் பின்­ன­ணி­யில் திரைக்கலை­ஞர்­கள் எந்த அளவு உழைத்து இருப்­பார்­கள் என்­பது யாருக்­கும் தெரி­யாது.

அத்­த­கைய ஓர் அனு­ப­வத்தை அண்­மை­யில் பெற்­றுள்­ளார் மகிமா நம்­பி­யார். 'ஓ மை டாக்' என்ற படத்­தின் படப்­பி­டிப்­புக்­காக அண்மை­யில் ஊட்டிக்குச் சென்­றாராம். அங்கு நடுங்க வைக்­கும் குளி­ரில் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­ட­ன­வாம்.

தொடர்ந்து பத்து நாள்­கள் நடை­பெற்ற படப்­பி­டிப்­பின்­போது மிகுந்த சிர­மங்­க­ளுக்கு ஆளான போதி­லும் காட்­சிகள் சிறப்­பா­கப் பட­மாக்­கப்­பட்டுள் ளதாக இயக்­கு­நர் சொன்­ன­தும், சோர்­வும் சிர­மங்­களும் அடுத்த நொடியே மாய­மா­கி­விட்­டதா­கச் சொல்­கி­றார்.

என்ன நடந்­தது என்­பது குறித்து மகிமா பட­படப்­பு­டன் விவ­ரிப்­ப­தைக் கேட்­போம்.

"படப்­பி­டிப்­பின் முதல் நாள் அன்றே ஊட்டி குளிரை என்­னால் தாங்க முடி­ய­வில்லை. இயக்­கு­நர் சரோவ் சண்­மு­கம் ஏற்­கெ­னவே ஒரு­நா­ளைக் கூட வீண­டிக்­கக்­கூ­டாது என்று மொத்த படக்­கு­ழு­வி­ன­ருக்­கும் அறி­வு­றுத்தி இருந்­தார்.

"தின­மும் அதி­காலை வேளை­யில் படப்­பி­டிப்பு நடக்­கும் இடத்­துக்­குச் சென்­று­வி­டு­வோம். சூரி­யன் உதிக்­கும் வேளை­யில் இருக்­கும் மங்­கிய வெளிச்­சத்­தில்­தான் முக்­கி­ய காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன.

"முதல்­நாள் படப்­பி­டிப்பு நடந்த இடத்­துக்­குச் சென்­ற­போது குளிரில் நடுங்­கி­ய­ப­டியே இருந்­தேன். அதி­காலை குளிரை யாரால் சமா­ளிக்க முடி­யும். அன்­றைய தினம் மிக முக்­கி­ய­மான வச­னங்­க­ளு­டன் சில காட்­சி­களை எடுக்க இயக்­கு­நர் சரோவ் சண்­மு­கம் திட்­ட­மிட்டு இருந்­தார். அத­னால் அவ­ரி­டம் எனக்­கான பிரச்­சி­னை­கள் குறித்­துப் பேச தயக்­க­மாக இருந்­தது.

"படக்­கு­ழு­வில் மற்ற அனை­வருமே கால் உறை, குளி­ரில் இருந்து காக்­கும் சிறப்பு உடை­கள், தலைக்கு குல்லா என்று தகுந்த முன்­னேற்பாடு­களு­டன் வந்­தி­ருந்­த­னர். அத­னால் அவர்­க­ளால் இயல்­பாக வேலை பார்க்க முடிந்­தது. ஆனால் நான் அங்கு எடுக்­கப்­படும் காட்­சிக்­கான உடையை மட்­டுமே அணிந்­தி­ருந்­தேன். எனது சப்­பாத்­து­க­ளுக்குப் பொருத்­த­மான காலு­றை­களை எடுத்து வர­வில்லை. அத­னால் வெறுங்­கா­லில் பட்ட குளிர், உச்­சந்­தலை வரை பாய்ந்­தது.

"அப்­போது எனது ஒப்­ப­னைக் குழு­வில் இருந்த உத­வி­யா­ளர் ஒரு­வர் குளிரைச் சமா­ளிப்­ப­தற்­கான சிறப்பு உடை ஒன்றைக் கொடுத்­தார். அதை அணிந்த பிறகு கொஞ்சம் சமா­ளிக்க முடிந்­தது.

"இந்­நி­லை­யில், படக்­கு­ழு­வைச் சேர்ந்த சிலர் ஒவ்­வொரு வச­னத்­தை­யும் நான் பேசி முடித்­த­தும், ஓடி வந்து என்னைச் சூழ்ந்துகொள்­வார்­கள். ஜெர்­கின், கோட் உடை­களைத் தந்து சில நிமி­டங்­கள் அணி­யச் செய்­வார்­கள். சூடான பானங்­களும் தரு வர். அத­னால்­தான் தாக்­குப்­பிடிக்க முடிந்­தது. சினிமா என்­பது ஒரு கூட்டு முயற்சி என்­பதை அங்கு நன்­றா­கப் புரிந்துகொண்­டேன்.

"எனக்கு சரு­மப் பிரச்­சினை உள்­ளது. கொஞ்­சம் கவ­னக்­கு­றை­வாக இருந்­தா­லே, ஏதா­வது தொற்­றுக்காளாகி அவ­திப்­பட நேரும். மேலும், என் முகத்­தில் சிவப்­பாக தடித்­து­வி­டும். பிறகு கேமரா­வில் காட்­டும் அள­வுக்கு என் முகம் இருக்­காது.

"குளி­ரில் எடுக்­கப்­பட்ட சில காட்­சி­களில் நான் நீள­மான வச­னங்­க­ளைப் பேசி, கண்­ணீர் விட வேண்­டி­யி­ருக்­கும் என்று இயக்கு­நர் சொன்­ன­போது அரண்டு போனேன். கார­ணம், குளி­ரில் ஒன்­றி­ரண்டு வரி­களில் அமைந்த வச­னங்­க­ளைப் பேசவே தடு­மாற வேண்­டி­யி­ருக்­கும். இதில் நீள­மான வச­னங்­கள், கண்­களில் கண்­ணீர் என்றதும் பய­மாக இருந்தது.

"அந்­தக் காட்­சி­க­ளைப் பல­முறை பட­மாக்­கி­னோம். எப்­ப­டியோ தட்­டுத்­த­டு­மாறி, இயக்­கு­நர் சொன்­ன­படி நடித்து முடித்­தேன். மொத்த படக்­கு­ழு­வும் என் நடிப்­பைப் பாராட்­டி­யது," என்று தமது படப்­பி­டிப்பு அனு­ப­வங்­களை விவ­ரிக்­கி­றார் மகிமா.