தம்பி ராமையா: என் மகன் மீது தவறில்லை

2 mins read
bf899a5a-e798-4d1b-a789-1160d3c9e9ce
'தண்ணி வண்டி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

கொரோனா போராட்­டத்­துக்கு மத்தி யி­லும் தமிழ்த் திரை­யு­ல­கில் ஏதா வது பிரச்­சி­னை­கள் முளைப்­ப­தும் அவற்­றுக்­கான பஞ்­சா­யத்து கூட்­டப்­ப­டு­வதும் நின்­ற­பா­டில்லை.

அந்த வகை­யில் அண்­மை­யில், 'தண்ணி வண்டி' படம் தொடர்­பாக ஒரு சர்ச்சை வெடித்­தது.

இது நடி­கர் தம்பி ராமை­யா­வின் மகன் உமா­பதி ராமையா நடித்த படம். சில தினங்­க­ளுக்கு முன்னர் படத்தை வெளி­யிட்­ட­னர்.

இந்­நி­லை­யில், திடீ­ரென தம்பி ராமையா, உமா­பதி ஆகிய இரு­வரும் கூட்­டுச்சதி­யில் ஈடு­பட்டு தனது படத்தை தோல்­வி­ய­டை­யச் செய்ய திட்­ட­மி­டு­வ­தாக படத்­தின் தயா­ரிப்­பா­ளர் காவல்­து­றை­யில் புகார் அளித்­தார். இத­னால் கோடம்­பாக்­கத்­தில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

படத்­தின் விளம்­பர நிகழ்­வில் உமா­பதி பங்­கேற்­கா­த­து­தான் பிரச்­சினை ஏற்­ப­டக் கார­ணம்.

இதை­ய­டுத்து தம்பி ராமை­யா­வும் அவ­ரது மகன் உமா­ப­தி­யும் வேண்­டு­மென்றே தன்னை கஷ்­டப்­ப­டுத்த வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் செயல்­ப­டு­வ­தாக தயா­ரிப்­பா­ளர் சர­வ­ணன் சாடி­னார்.

இந்­நி­லை­யில், தம்பி ராமையா 'தண்ணி வண்டி' படப்­பி­ரச்சினை குறித்து விளக்­கம் அளித்­துள்­ளார்.

"என் மக­னுக்­காக எந்த இடத்தி­லும் நான் வாய்ப்பு கேட்­டது கிடை­யாது. 'நீயே போ, விழுந்து எழுந்து வாய்ப்பு தேடு' என்று சொல்லி­விட்­டேன். 'நான் அப்­ப­டித்­தான் தேடினேன். உன் தோல்­வி­தான் உன்னை உயர்த்­தும்' என்­றேன்.

"நான் இன்று நன்­றாக வாழக் கார­ணம் இயக்­கு­நர் பிரபு சால­மன்­தான். அவ­ருக்­காக ஒரு படத்­தில் நடிக்­கச் சென்­றி­ருந்­தேன். அத­னால் தான் 'தண்ணி வண்டி' படப் பிரச்­சினை குறித்து எது­வும் பேசவில்லை. இந்­தப் படத்­தின் இயக்­கு­ந­ரி­டம் முத­லில் சொன்­னேன். எனது மக­னின் 'சிறுத்தை சிவா' என்ற படம் உரு­வாகி இருக்­கிறது. அந்­தப் படம் வெளி­யா­ன­தும் 'தண்ணி வண்டி' படத்தை வெளி­யி­ட­லாம் என்று சொன்­னேன். ஆனால் அவர் மறுத்­து­விட்­டார்.

"என் மகன் ரியா­லிட்டி நிகழ்ச்சி­யில் கலந்துகொண்டு கொரோனா பாதிப்பால் உடல் எடை குறைந்து வந்­தார். மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றார். அவ­ரது உடல்நிலை மிக­வும் முக்­கி­யம்.

"அத­னால்தான் 'தண்ணி வண்டி' பட விளம்­பர நிகழ்­வில் கலந்துகொள்ள முடி­ய­வில்லை. அவர் மீது தவ­று இல்லை," என்­கி­றார் தம்பி ராமையா.