லண்டனில் பதிவாகும் வடிவேலு பாடும் பாடல்

லண்டனில் பதிவாகும் வடிவேலு பாடும் பாடல்

1 mins read
0cfe8ea9-93a8-4cbe-83a1-647dcdd33fc9
லண்டன் ஒலிப்பதிவுக் கூடத்தில் வடிவேலுவுடன் படக்குழுவினர். -

'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்' படத்­தில் ஒரு பாட­லைப் பாட உள்­ளார் வடி­வேலு. அந்­தப் பாடலை லண்­ட­னில் உள்ள ஒலிப்­ப­தி­வுக் கூடத்­தில் பதிவு செய்ய உள்­ள­னர்.

இதற்­காக அப்­ப­டக்குழுவினரு டன் லண்­ட­னில் முகா­மிட்­டுள்­ளார் இசையமைப்பாளர் சந்­தோஷ் நாரா­யணன்.

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு தமி­ழில் மீண்­டும் நாய­க­னாக நடிக்க உள்­ளார் வடி­வேலு. இதை­ய­டுத்து இயக்­கு­நர் சுரா­ஜு­டன் கூட்­டணி அமைத்­துள்­ளார்.

லைகா நிறு­வ­னம் தயா­ரிக்­கும் 'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்' படத்­தில் மீண்டும் பழைய வடி­வே­லுவைப் பார்க்க முடியும் என்­கி­றார் சுராஜ். இப்­ப­டத்­துக்கு இசை­ய­மைக்­கி­றார் சந்­தோஷ் நாரா­ய­ணன்.

அண்­மை­யில் சில முக்­கி­யக் காட்­சி­க­ளின் படப்­பி­டிப்­புக்­காக, 'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்' படக்­குழு லண்­டன் சென்று சென்னை திரும்பி­யது. அதன் பின்­னர் வடி­வேலு கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டார். அத­னால் படப்­ப­ணி­கள் நிறுத்­தப்­பட்­டன. இப்­போது தொற்­றில் இருந்து குண­ம­டைந்­து­விட்­ட தாக அறி­வித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்­தின் அடுத்­த­கட்ட பணி­கள் தொடங்கி உள்­ளன. மீண்­டும் லண்­டன் சென்­றுள்­ளது படக்குழு.

அதற்கு முன்­ன­தா­கவே இசை­ அமைப்­பா­ளர் சந்­தோஷ் நாரா­ய­ண­னும் லண்­டன் சென்­று­விட்­டா­ராம். அங்கு படத்­துக்­கான பாடல்­க­ளுக்கு மெட்­ட­மைக்க உள்­ள­தா­கத் தக­வல்.

வடி­வேலு பாட இருக்­கும் பாட­லின் ஒலிப்­ப­தி­வும் அங்­கு­தான் நடக்க உள்­ளது.

, :   