சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி உள்ளனர்.
நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகா, சகோதரர் கார்த்தி யுடன் இணைந்து வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை கார்த்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "நெஞ்சார்ந்த தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்," என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படங்களில் சிவகார்த்திகேயனும் அவருடைய மகனும் பச்சை நிறத்தில் ஒரே மாதிரியாக வேட்டி, சட்டை அணிந்துள்ளனர். மகள் ஆராதனா நீல நிற ஆடையிலும் மனைவி ஆர்த்தி பட்டுப்புடவையிலும் உள்ளனர்.
இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், சூர்யா, சிவா குடும்பத்தாருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

