நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் திங்கட்கிழமை இரவு (ஜனவரி 17) வெளியிட்ட அறிவிப்பு, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வேளையில், ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா தமது இன்ஸ்டகிராம், டுவிட்டர் பக்கங்களில் சிறிய வயதில் ஐஸ்வர்யா மற்றும் தம்முடைய தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை முகப்புப் படமாக வைத்துள்ளார். இது, ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தனுஷ், ஐஸ்வர்யா பிரிவதற்கான காரணம் குறித்து இணையத்தில் பலவாரியான கருத்துகள் வெளிவந்துள்ளன. தம்முடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்குவதை தனுஷ் வழக்கமாக வைத்திருந்ததால், அவர்மீது மிகுந்த மனவருத்தத்தில் ஐஸ்வர்யா இருந்ததாகக் கூறப்படுகிறது.