தொடரும் பிடிவாதம்: அரவணைக்கும் பெற்றோர்

தொடரும் பிடிவாதம்: அரவணைக்கும் பெற்றோர்

2 mins read
8ad33051-50b4-46d0-bdc2-2bd512a4f478
மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மனைவி லதாவுடன் ரஜினி. (வலது) பெற்றோர், அண்ணன், சகோதரிகளுடன் தனுஷ். -
multi-img1 of 2

கடந்த இரு தினங்­க­ளாக சமூக வலைத்­த­ளங்­களில் அதி­கம் விவா­திக்­கப்­படும் தலைப்­பாக உரு­வெ­டுத்­துள்­ளது தனுஷ், ஐஸ்­வர்யா பிரிவு. அறி­விப்­பு­தான் திடீ­ரென வந்­துள்­ளதே தவிர, கடந்த பல மாதங்­க­ளா­கவே இரு­வ­ரது உற­வில் சிக்­கல் நிலவி வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஒவ்­வொரு முறை­யும் பிரச்­சினை வெடிக்­கும்­போது ரஜினி இரு­வ­ரை­யும் அழைத்து சமா­தா­னம் செய்­வார் என்­றும் அதன் பிறகு சமா­தா­னம் ஏற்­படும் என்­றும் தமி­ழக ஊட­கம் ஒன்று தெரி­வித்­துள்­ளது.

ஐஸ்­வர்யா பிரிவு தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில் மிகக் கவ­ன­மாக தன் பெயரை 'ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்த்' என்று குறிப்­பிட்­டி­ருந்­த­தைக் கண்டு இரு வருக்­கும் நெருக்­க­மா­ன­வர்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் கொரோனா ஊர­டங்கு தொடங்­கி­ய­துமே ஐஸ்­வர்யா பெற்­றோர் வீட்­டுக்­குச் சென்­று­விட்­டார் என்­றும் ரஜினி மேற்­கொண்ட சம­ரச முயற்­சி­கள் பலன் அளிக்­க­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

"உற­வி­னர்­கள், நண்­பர்­கள் சில­ரும் தலை­யிட்ட போதி­லும் தனுஷ் தன் முடி­வில் பிடி­வா­த­மாக உள்­ளார். நண்­பர்­க­ளா­கப் பிரி­கி­றோம் என்­ப­தற்கு, இரு­வ­ரும் விவா­க­ரத்து செய்­யப் போவ­தில்லை என்று இரு வீட்­டா­ரும் புரிந்­து­கொண்­டுள்­ள­னர். இரு மகன்­களும் ஐஸ்­வர்யா பரா­ம­ரிப்­பில்­தான் தொடர்ந்து இருப்­பர். இதை தனு­ஷு­டன் பேசி முடிவு செய்­துள்­ளார் ஐஸ்­வர்யா.

"அண்­மைக் கால­மாக தன் தந்­தை­யைப் போலவே ஐஸ்­வர்­யா­வும் ஆன்­மி­கத்­தில் அதிக நாட்­டம் கொண்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

"தனு­ஷின் நிலை கண்டு அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் கவ­லை­யில் உள்­ள­னர். அவர் சென்­னை­யில் உள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் வசிக்­கி­றார். மக­னுக்­குத் துணை­யாக இருக்க தனு­ஷின் தாயார் அங்கு வந்து தங்­கி­யுள்­ளா­ராம். தனுஷ் போயஸ் தோட்­டப் பகு­தி­யில் புது வீடு கட்டி குடி­யே­றி­ய­தும் எதிரே உள்ள வீட்­டில்­தான் ஐஸ்­வர்­யா­வும் இரு மகன்­களும் இருப்­பார்­கள்," என்­கி­றார்­கள் விவரம் அறிந்தவர்கள்.

தனுஷ் தற்­போது படப்­பி­டிப்­புக் காக ஹைத­ரா­பாத்­தில் உள்­ளார். அவர் சென்னை திரும்­பி­ய­தும் இந்த விவ­கா­ரம் தொடர்­பாக புதுத் தக­வல்­கள் வெளி­யா­கக்­கூ­டும்.