இந்தியாவில் உள்ள முக்கியமான இடங்கள் அனைத்தையும் நேரில் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
முதல் கட்டமாக, அண்மையில் காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரைப் போன்ற மிக அழகான இடத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் பனிப்பொழிவில் நடந்து சென்ற நிமிடங்களை வாழ்நாளில் மறக்கவே இயலாது என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். இனி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவின் முக்கிய நகரங்களை வலம்வரப் போவதாக கூறும் ஐஸ்வர்யா, தற்போது தமிழில் 'டிரைவர் ஜமுனா', 'மோகன்தாஸ்', 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.