நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகிய இருவருக்கும் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மேம்பாட்டுக்கு இவர்கள் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
உண்மைக் கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி 'ஜெய் பீம்' திரைப்படத்தை தயாரித்ததற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இதேபோல, 'அனைத்துலக வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் திமுக இளையரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்படுகிறது.