அவ்வப்போது சர்ச்சையைக் கிளப்புவது என்றால் ஆண்ட்ரியாவுக்கு மிகுந்த விருப்பம் போல் இருக்கிறது. அண்மையில், அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வேறொன்றுமில்லை. குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள்தான் அவை. இதையெல்லாமா வெளியிடு வது என்று சிலர் எதிர்க்க, இன்னொரு தரப்பினரோ, 'அந்தப் படங்களில் ஆபாசம் ஏதும் இல்லை' என்று ஆண்ட்ரி யாவை ஆதரித்துள்ளனர்.
எது எப்படியோ, அந்தப் புகைப்படங்களை ஏராளமானோர் பார்த்துள்ளனர். ஆண்ட்ரியா இதைத்தான் எதிர்பார்த்திருப்பார்.
இயக்குநர் பாலாவை வைத்து தயாரித்த படம் சரியாக ஓடாததால் கடன் சுமையில் சிக்கினார் சசி குமார். அதனால் படங்களைத் தயாரிக்காமல், இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். இப்போது கடன்கள் தீர்ந்துவிட்டதால் மீண்டும் ஒரு படத்தை இயக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து, 'ஈசன்' படத்துக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகளில் மூழ்கி உள்ளார் சசிகுமார்.