'பாகுபலி' படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய நடிகர்கள் 'பான்-இந்தியா ஸ்டார்'களாக மாறி வருகிறார்கள்.
'பான் - இந்தியா' படங்கள் என்றால் ஒரு நடிகர் இருக்கும் மாநிலத்தில் வெளியாகும் அவருடைய படங்கள் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியாகும். அதனால் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு அனைத்து
மாநிலங்களிலும் வரவேற்பு இருக்கும்.
அப்படித்தான் 'பாகுபலி' படத்தில்
நடித்திருந்த பிரபாஸுக்கு இந்தியா
முழுவதிலும் தனி மார்க்கெட் உருவானது. அண்மையில் வெளிவந்த 'புஷ்பா' படத்தின் வெற்றி மூலம் அல்லு
அர்ஜுனும் 'பான்-இந்தியா' கணக்கைத் துவக்கியுள்ளார். அடுத்தடுத்து மேலும் சில தென்னிந்திய படங்கள் 'பான்-
இந்தியா' படங்களாக வெளியாக
உள்ளன.
இந்நிலையில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தற்போது தென்னிந்திய நாயகர்
களைப் பற்றி ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "தென்னிந்திய நடிகர்களும் தென்னிந்திய படங்களும் இந்திய கலா சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.
"அவர்கள் தங்கள் குடும்பங்கள்
மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள்.
மேற்கத்திய மயமாக இருக்கவில்லை. அவர்கள் தொழில்முறையும் ஆர்வமும் இணையற்றது. 'பாலிவுட்' அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்கக்கூடாது," என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து 'பாலிவுட்'டிற்கு அடுத்தடுத்து சில நடிகர்கள் வந்து வெற்றிபெறுவதால் 'பாலிவுட்' நாயகர்களை வெறுப்பேற்ற இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறாரோ கங்கனா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் திரைத்துறையினர்.

