கிட்டு: இது போர்க்கள மருத்துவர்களின் கதை

கிட்டு: இது போர்க்கள மருத்துவர்களின் கதை

1 mins read
e53a7896-d2b7-47b6-a12e-c35e8d53b420
'சல்லியர்கள்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

தி.கிட்டு இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது 'சல்­லி­யர்­கள்'. இவ­ரது முதல் படம் 'மேதகு' ஏற்­ப­டுத்­திய பர­ப­ரப்­பும் அப்­போது எழுந்த வாக்கு­வா­தங்­களும் அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

விடு­த­லைப்­பு­லி­கள் இயக்கத்தின் தலை­வர் பிர­பா­க­ர­னின் தொடக்க கால வர­லாற்றை தன் படைப்­பில் அழுத்­த­மா­கப் பதிவு செய்­தி­ருந்­தார் கிட்டு.

"உண்­மை­யான வர­லாற்­றைத் திரைப்­ப­டம் மூலம் சொன்­னால் சாதி, மதத்­தால் பிரிந்­து­கி­டக்­கும் தமி­ழர்­களை ஒன்­று­கூட்ட வாய்ப்­பி­ருக்­கிறது. ஈழப்­போ­ராட்­டம் பற்­றிய எவ்­வ­ளவோ உண்­மை­கள் மீத­மிருக்­கின்­றன. கசப்­பான உண்­மை­கள் இன்­னும் மறைந்­து ­கி­டக்­கின்­றன. அதை உணர்ந்து உரு­வாக்­கப்­படு கிறது 'சல்­லி­யர்­கள்' படம்," என்­கி­றார் கிட்டு.

இது­வும் ஈழம் தொடர்­பான திரைப்­ப­டம்­தா­னாம். போர் முனை­யில் ஏரா­ள­மான தமி­ழர்­க­ளுக்கு சிகிச்சை அளித்த மருத்­து­வர்­க­ளின் அனு­ப­வங்­க­ளைக் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளார்.

"அச்­ச­ம­யம், எத்­த­கைய சம­ர­சங்­க­ளுக்­கும் இட­ம­ளிக்­கா­மல் களத்­தில் நின்று பல மருத்­து­வர்­கள் துணிச்­ச­லு­டன் பணி­யாற்­றி­னர்.போர் நடக்­கும் இடத்­திற்­குக் கொஞ்­சம் தள்ளி பதுங்­கு­குழி மருத்­து­வ­மனை இருக்­கும். சிறிய பகு­தி­யில் எல்லா வச­தி­களும் கொண்டு அந்­தப் போர்ச்­சூ­ழ­லி­லும் இயங்­கிக் கொண்­டி­ருக்­கும். அந்­தப் பதுங்­கு­குழி மருத்­து­வ­ம­னை­யின் பர­ப­ரப்பு நிமி­டங்­கள் இதில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன.

"பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­னால் ராஜேந்­திர சோழன் படைப் பிரி­வில் போர் மருத்­து­வப் பிரி­வும் இருந்­துள்ளது. நெஞ்­சில் குத்­துப்­பட்ட ஈட்டி முனை­க­ளைப் பறித்து, தையல் போட்டு மருத்­து­வப் பணி ஆற்­றி­ய­வர்­களை 'சல்­லிய கிரியை செய்­ப­வர்­கள்' என்று அழைத்­தி­ருக்­கி­றார்­கள். அந்­தப் பணி­யைச் செய்­த­வர்­களைச் 'சல்­லி­யன் மருத்­து­வன்' என்று அழைத்­த­தா­கக் கல்­வெட்டு­களில் தக­வல்­கள் இருக்­கின்­றன. அதை வைத்துதான் 'சல்­லி­யர்­கள்' என தலைப்பு வைத்தோம்," என்­கி­றார் கிட்டு.