'மாநாடு' வெற்றியைத் தொடர்ந்து சிம்பு மட்டுமல்ல, அதன் இயக்குநர் வெங்கட்பிரபுவும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் 'மன்மத லீலை'. இதில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார்.
'மாநாடு'க்காக அவர் பெற்ற சம்பளம் ரூ.4 கோடி. ஆனால் கொரோனா நெருக்கடியால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளதால் திரையுலகத்தினர் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் வெங்கட்பிரபு ரூ.3 கோடி மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார். இந்நிலையில் தெலுங்குப் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்திருக்கிறது. அதை ஏற்றுக்கொண்ட அவர் ரூ.15 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதேபோல், முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று தங்களுக்காக நேரடித் தமிழ்ப் படம் ஒன்றை இயக்கித் தர இயக்குநர் பா.ரஞ்சித்தை அணுக, அவரும் சொல்லி வைத்தாற்போல் 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.

