உதவி கேட்ட சிறுமியைக் கண்டுகொள்ளாத ராஷ்மிகா மந்தனாவை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
'அழகு இருக்கும் இடத்தில் நல்ல குணம் இல்லை' என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில், படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தார் ராஷ்மிகா. அங்கு தங்கியிருந்த பெரிய விடுதியில் இருந்து வெளியே வந்தபோது, ஓர் ஏழைச் சிறுமி தமக்கு ஏதாவது தருமாறு கைநீட்டி கேட்டுள்ளார். ராஷ்மிகா அச்சிறுமியைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், அவரது பாதுகாவலர்கள் அந்தச் சிறுமியை தள்ளிவிட்டுள்ளனர். அதன்பிறகும் அந்தச் சிறுமி தமக்கு பசிப்பதாகச் சொல்லி கையை நீட்டி, ஏதாவது சாப்பிட கொடுக்குமாறு கெஞ்ச, ராஷ்மிகா சிரித்தபடியே தன் காரில் ஏறிச் செல்கிறார். இந்தக் காட்சியை யாரோ ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

