'தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசமாட்டேன்'

'தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசமாட்டேன்'

2 mins read
7b7e2466-afe4-4a70-bc96-315eea40dc75
நிதி அகர்வால் -

காதல் குறித்­தும் தனிப்­பட்ட வாழ்க்கை குறித்­தும் வெளிப்­ப­டை­யாக தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வதில் தமக்கு விருப்­பம் இல்லை என்­கி­றார் இளம் நாயகி நிதி அகர்­வால். அண்­மைய பேட்­டி­யில், இன்­றைய தேதி­யில் உல­கம் உள்ள சூழ்­நி­லை­யில் எதை­யும் திட்­ட­மிட்டு மேற்­கொள்ள இய­லாது என்­கி­றார்.

கார­ணம், நாம் ஒரு திட்­டத்தை வகுத்து அதை செயல்­படுத்த முயல்­வ­தற்­குள் உல­கம் தலை­கீ­ழாக மாறி­வி­டு­கிறது என்று கொரோனா விவ­கா­ரத்­தைச் சுட்­டிக் காட்­டு­கி­றார்.

"நானும் ஒரு முன்­னணி நடி­க­ரும் காதல்­வ­யப்­பட்­டி­ருப்­ப­தாக கூறு­கி­றார்­கள். அது குறித்து என்­னி­டம் சில கேள்­வி­கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்­குப் பதில் அளிக்க விரும்­ப­வில்லை.

"காதல், திரு­ம­ணம், குடும்­பம் ஆகி­யவை எல்­லாம் ஒரு­வ­ரது தனிப்­பட்ட வாழ்க்கை சம்­பந்­தப்­பட்­டது. அது குறித்து வெளிப்­ப­டை­யாக விவா­திக்­க­வும் பகிர்ந்­து­கொள்­ள­வும் எது­வும் இல்லை," என்று திட்­ட­வட்­ட­மா­கச் சொல்­கி­றார் நிதி அகர்­வால்.

தற்­போது தமி­ழில் மகிழ்­தி­ரு­மேனி இயக்­கத்­தில், உத­ய­நிதி ஸ்டா­லின் நாயகனாக நடிக்­கும் படத்­தில் நிதி­ தான் நாயகி.

படத்­தின் கதை குறித்து தம்­மால் எது­வும் தெரி­விக்க இய­லாது என்­றா­லும், இந்­தப் படம் தனது திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கி­ய­மான படைப்­பாக இருக்­கும் என்­ப­தில் மட்­டும் தமக்­கும் சந்­தே­கமே இல்லை என்­கி­றார்.

"நான் நடித்­துள்ள இரண்டு தமிழ் படங்­க­ளி­லுமே ('ஈஸ்­வ­ரன்', 'பூமி') எனக்­கான பகுதி மிகக்­கு­றை­வு­தான். அதி­க­பட்­சம், பத்து பதி­னைந்து நிமி­டங்­கள்­தான் திரை­யில் தோன்றி இருப்­பேன்.

"ஆனால், மகிழ்­தி­ரு­மேனி எனக்கு ஏற்ற ஒரு கதா­பாத்­தி­ரத்தை அமைத்­தி­ருப்­ப­து­டன், படம் நெடு­கி­லும் என்னை இடம்­பெ­றச் செய்­துள்­ளார். இந்­தப் படம் குறித்த எதிர்­பார்ப்பு கோடம்­பாக்­கத்­தில் அதி­க­ரித்து வரு­வ­தாக அறி­கி­றேன். இந்த ஆண்டு எனது நடிப்­பில் குறைந்­த­பட்­சம் ஆறு படங்­க­ளா­வது வெளி­யா­கும் என்ற நம்­பிக்கை உள்­ளது.

"நான் திடீ­ரென மாய­மா­கி­விட்­ட­தாக தமிழ் ரசி­கர்­கள் கூறு­கின்­ற­னர் என்று ஊட­கங்­களில் படித்­தேன். திரை­யு­ல­கம் என்­றால் இப்படித்­தான் இருக்­கும்.

"நான் நடித்த இரண்டு தமிழ் படங்­களும் ஒரே தேதி­யில் வெளி­யீடு கண்­டன. அதன் பிறகு தெலுங்­கில் ஒப்­புக்­கொண்ட படங்­களில் நடித்து­விட்டு மீண்­டும் தமி­ழுக்கு வந்­துள்­ளேன். சிறு இடை­வெளி ரசி­கர்­களை இவ்­வாறு பேச வைத்­துள்­ளது," என்­கி­றார் நிதி அகர்­வால்.