ஹைதராபாத்துக்கு சென்ற தனுஷும் ஐஸ்வர்யாவும் ஜனவரி 16ஆம் தேதி இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்டு மது அருந்தி, வாய்த் தகராறு முற்றியதால் அரசல் புரசலாக இருந்த விவகாரம் விவாகரத்து வரை சென்றுவிட்டது என்கின்றனர் விருந்தில் கலந்துகொண்டவர்கள்.
அன்று இரவு பிரபலம் ஒருவர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்ய தனுஷும் ஐஸ்வர்யாவும் சண்டை போடத் துவங்கி இருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கும் ஐஸ்வர்யா தனுஷை கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு வாக்குவாதத்தைத் தொடர்ந்திருக்கிறார். அப்பொழுதுதான் பிரிவது என்று முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
மறுநாள் தனுஷ் ஐஸ்வர்யாவிடம், "நேற்று இரவு பேசியது எல்லாம் உண்மைதானே," என்று கேட்டாராம். அதற்கு ஐஸ்வர்யாவும் "ஆமாம். இனியும் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது," என்று தெரிவித்தாராம்.
அதன் பிறகே தனுஷ் பிரிவு குறித்து டுவிட்டரில் பதிவுசெய்ய, ஐஸ்வர்யாவும் இன்ஸ்டகிராமில் பதிவு போட்டிருக்கிறார். தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
"நீ தனுஷுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும்," என்று ஐஸ்வர்யாவுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் ரஜினி. இதற்கிடையே தன் கவனத்தைத் திசை திருப்ப அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தனுஷ்.
பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்று மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட இருக்கிறதாம்.
'வலிமை' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் அதே படத்தை இயக்கவுள்ள நிலையில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார்.
'புஷ்பா' படத்தில் சமந்தா ஆடிய குத்தாட்டத்தால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்திலும் ஒரு
குத்தாட்டத்தைச் சேர்க்க இருக்கின்றனர் படக்குழுவினர்.

