மீண்டும் திரையில் இணையும் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் திரையில் இணையும் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

1 mins read
646124f2-e78e-44df-a268-909e306620a6
'மாநாடு' படத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா. -

மலை­யா­ளத்­தில் வெற்றி பெற்ற 'டிரை­விங் லைசென்ஸ்' என்ற படத்தை தமி­ழில் மறு­ப­திப்பு செய்ய உள்­ள­னர். லால் இயக்­கிய அந்­தப் படத்­தில் மலை­யாள நடி­கர்­கள் பிருத்விராஜும் சூர­ஜும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், அதன் தமிழ்ப் பதிப்­பில் நாய­க­னாக சிம்பு நடிப்­பது உறு­தி­யாகி உள்­ளது. அவர் நடித்த 'வாலு' படத்தை இயக்­கிய விஜய் சந்­தர் இப்­ப­டத்தை இயக்­கு­கி­றார்.

சிம்­பு­வுடன் மோதும் வில்­லன் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கக் கேட்டு எஸ்.ஜே.சூர்­யாவை அணு­கி­யுள்­ள­ன­ராம். 'மாநாடு' படத்­தின் வெற்­றியை அடுத்து, இரு­வ­ரும் மீண்­டும் இணைந்து நடித்­தால் படம் வெற்றி­பெ­றும் என்று தயா­ரிப்­புத் தரப்பு கரு­து­கி­ற­தாம்.

ஒரு­வேளை எஸ்.ஜே.சூர்யா கால்­ஷீட் கிடைக்­க­வில்லை என்­றால், சிம்­பு­வின் நெருங்­கிய நண்­ப­ரான நடி­கர் ஜெய்யை ஒப்­பந்­தம் செய்ய வாய்ப்­புள்­ள­தா­கத் தக­வல்.

சிம்புவும் இந்த ஏற்பாட்டுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.