பார்வையற்றவராக நிவேதா

1 mins read
5b277b56-711f-4156-b089-9e7f5c9bd9a3
-

புதிய படம் ஒன்­றில் கண் பார்­வை­யற்­ற­வ­ராக நடிக்­கி­றார் நிவேதா பெத்­து­ராஜ்.

இது­போன்ற கதா­பாத்­தி­ரங்­களுக்­காக தாம் நீண்ட நாள்­க­ளாக காத்­தி­ருப்­ப­தா­க­வும் இப்­போது இந்த விருப்­பம் நிறை­வேறி உள்­ளது என்றும் இவர் கூறி­யுள்­ளார்.

நடி­கர் அல்லு அர்­ஜுன் 'ஆஹா' என்ற பெய­ரில் ஓடிடி நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வரு­கி­றார். அந்­நிறு­வ­னம் தயா­ரிக்­கும் திகி­லும் விறு­வி­றுப்­பும் நிறைந்த படத்­தில் நிவே­தாவை நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

கதைப்­படி, தனது உற­வு­க­ளுக்கு ஆபத்து நேர இருப்­பதை முன்­கூட்­டியே அறிந்­து­கொள்­ளும் கண் பார்வை­யற்ற இளம் பெண், அவர்­களைக் காப்­பாற்ற முயற்சி செய்­கி­றார். அப்­போது அவர் எதிர்­கொள்­ளும் சவால்­களும் ஆபத்­து­க­ளும்­தான் கதை­யாம்.

"நல்ல கதைக்­க­ளம் உள்ள படங்­களில் சில நல்ல கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ளேன். எனினும், இப் புதிய படம் சவா­லான கதைக்­களத்­து­டன் உரு­வா­கிறது. அந்த ஒரு கார­ணத்­துக்­கா­கவே இதில் நடிக்க சம்­ம­தித்­தேன்," என்கிறார் நிவேதா.