ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்ட நாயகி

ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்ட நாயகி

1 mins read
8b2e9952-d7ce-435c-915c-a8d5895f4ffd
-

இயக்­கு­நர் சங்­கர் தற்­போது தெலுங்­கில் ராம்­ச­ரண் நடிக்­கும் படத்தை இயக்கி வரு­கி­றார். இதில் முதல்­வ­ராக நடிக்­கி­றார் ராம்­சரண்.

இந்­நி­லை­யில் முதல்­வ­ரைப் பேட்டி காணும் செய்­தி­யா­ளர் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கக் கேட்டு ராஷ்மிகா மந்­த­னாவை அணு­கி­உள்­ள­னர். ஒன்­றி­ரண்டு நாள்­கள் கால்­ஷீட் கொடுத்­தால் போதும் என்­றும் சில மணி நேரம் மட்­டுமே படப்­பி­டிப்­புக்கு வந்­தால் போதும் என்­றும் தயா­ரிப்­பா­ளர் தரப்பு கூறி­ய­தாம்.

அதைக்­கேட்ட ராஷ்­மிகா, கால்­ஷீட் ஒதுக்­கு­வ­தில் பிரச்­சினை இல்லை என்று கூறி­யுள்­ளார். எனி­னும் இந்­தச் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க அவர் கேட்ட தொகை ஒரு கோடி ரூபாய். இதைக்­கேட்டு தயா­ரிப்­புத் தரப்பு அதிர்ச்சி அடைந்த போதி­லும், பிறகு வேறு வழி­யின்றி அவர் கேட்ட தொகைக்கு ஒப்­புக்கொண்­ட­தாம்.

ராஷ்­மிகா நடித்து அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'புஷ்பா' படத்­தின் வசூலில் பல்­வேறு சாதனை­களைப் படைத்து வரு­கிறது. இதை­ய­டுத்து, இரண்டு கோடி ரூபாய் சம்­ப­ளம் பெற்று வந்த அவர், இப்­போது நான்கு கோடி ரூபா­யாக சம்­ப­ளத்தை உயர்த்­தி­விட்­டார்.

தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே இப்போது விஜய்யுடன் தமிழில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் ஒரு படத்துக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.