ஸ்ரீகாந்த்: சிம்புவை தவறாக புரிந்து கொள்கிறார்கள்

ஸ்ரீகாந்த்: சிம்புவை தவறாக புரிந்து கொள்கிறார்கள்

1 mins read
c58538e9-9350-46ac-b1f4-a8cb75ff6a4e
'தி பெட்' படத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே. -

'வெத்­து­வேட்டு' படத்தை இயக்­கிய மணி­பா­ர­தி­யின் அடுத்த படம் 'தி பெட்'. இதில் ஸ்ரீகாந்­தும் சிருஷ்டி டாங்­கே­வும் நாய­கன் நாய­கி­யாக நடித்­துள்­ள­னர்.

படத்­தின் கதை­யைக் கேட்­ட­போது ஏதா­வது சர்ச்சை வெடிக்­குமோ என்று தயங்­கி­னா­ராம் ஸ்ரீகாந்த். பிறகு இயக்­கு­நர் மீது நம்­பிக்கை வைத்து நடித்­தா­ராம்.

"சில பேர் கதை சொல்­லும்­போது காட்­சி­க­ளை­யும் விவ­ரிப்­பார்­கள். ஆனால் படப்­பி­டிப்­பின்­போது எல்­லாமே மாறி இருக்­கும். ஒரு படத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்ட பின்­னர் அதி­லி­ருந்து பின்­வாங்­க­வும் முடி­யாது. அப்படிச் செய்­தால் வேறு சில­ரு­டன் ஒப்­பிட்­டுப் பேச ஆரம்­பித்து விடு­வார்­கள்," என்­றார் ஸ்ரீகாந்த்.

கால்­ஷீட், படப்­பி­டிப்பு குறித்­துப் பேசி­ய­தாலோ என்­னவோ, சிம்பு குறித்­தும் ஓரிரு நிமி­டங்கள் பேசி­னார்.

"எல்­லோ­ருக்­கும் சிம்பு மாதிரி தைரி­யம் இருக்­காது. ஏனென்­றால் பல பேர் சிம்­புவை சரி­யாகப் புரிந்­து­கொள்­ள­வில்லை.

"ஆனால், அவர் அற்­பு­த­மான மனி­தர். படத்­தில் நடிக்க ஒப்புக்­கொண்ட பிறகு தன்னை முழுமை­யாக இயக்­கு­ந­ரி­டம் ஒப்­படைத்து விடு­வார்," என்­றார் ஸ்ரீகாந்த்.