பாட்டு பாடும் வடிவேலு: நடனம் அமைக்கும் பிரபுதேவா

1 mins read
ef5086ee-4063-42e3-84d9-6753ad60e903
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இடம்பெறும் காட்சியில் வடிவேலு. -

மீண்­டும் முழு வேகத்­து­டன் நடிக்­கத் தொடங்கி உள்­ளார் வடி­வேலு.

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு 'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்' படத்­துக்­காக ஒரு பாட­லைப் பாடி உள்­ளார். இது தமி­ழ­கத்­தின் பட்­டி­தொட்டி எங்­கும் ஒலிக்­கும் அள­வுக்கு சிறப்­பான பாட­லாக உரு­வாகி உள்­ள­தா­கத் தக­வல்.

இதற்­கி­டையே, 'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்' படத்­தின் மற்­றொரு பாடல் காட்­சிக்கு நட­னம் அமைக்க பிரபு­தே­வாவை அணுகி உள்­ள­னர். ஏற்­கெ­னவே பிர­பு­தே­வா­வும் வடி­வேலு­வும் 'காத­லன்' படத்­தில் 'பேட்ட ராப்' பாட­லுக்கு இணைந்து நட­ன­மாடி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஒரே ஒரு பாட­லுக்கு மட்­டும் நட­னம் அமைக்க முடி­யுமா என்று தயா­ரிப்­பா­ளர் கேட்க, ஒரு கோடி ரூபாய் சம்­பளம் கேட்­டுள்­ளார் பிர­பு­தேவா.

தயா­ரிப்­புத் தரப்பு அச­ர­வில்லை. பிர­பு­தேவா கேட்ட தொகையை தரு­வ­தா­கச் சொன்­னதை அடுத்து, விரை­வில் சென்­னை­யில் அந்­தப் பாடலை படமாக்க உள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.