'இந்தியிலும் எனக்கு வரவேற்பு உள்ளது'

'இந்தியிலும் எனக்கு வரவேற்பு உள்ளது'

1 mins read
e74cc468-1fc2-4c3b-a2ce-a47c56f2baca
'தமிழரசன்' படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன். -

தாம் நடிக்­கும் படங்­க­ளுக்கு இந்தி­யி­லும் தெலுங்­கி­லும் பலத்த வர­வேற்பு கிடைப்­ப­தா­கச் சொல்­கி­றார் விஜய் ஆண்­டனி. இதை­ய­டுத்து நேரடி இந்­திப் படத்­தில் நடிக்க உள்­ள­தாக அண்­மைய பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

"'பிச்­சைக்­கா­ரன்' படத்­துக்­குப் பிறகு தெலுங்­கில் எனக்­கென ஓர் இடம் கிடைத்­தி­ருப்­ப­தா­கக் கரு­து­கி­றேன். அதே­போல் இந்­தி­யில் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்ட எனது படங்­க­ளின் வசூல் நன்­றாக உள்­ளது," என்­கி­றார் விஜய் ஆண்­டனி.

தற்­போது 'ரத்­தம்' படத்­தில் நடித்து வரு­ப­வர், தாம் ஏற்­கெ­னவே நடித்து முடித்­துள்ள 'தமி­ழ­ர­சன்', 'அக்னி சிற­கு­கள்' உள்­ளிட்ட படங்­கள் வெளி­யீட்­டுக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றா­ராம். சரி, 'ரத்­தம்' என்ற தலைப்பு ரண­க­ள­மாக இருக்­கி­றதே?

"பொது­வாக நான் நடிக்­கும் படங்­க­ளின் தலைப்பு, கதைக்­கேற்­ற­வா­று­தான் வைக்­கப்­படும். 'பிச்­சைக்­கா­ரன்' என்ற தலைப்­பும்­கூட அப்­படி வைக்­கப்­பட்­ட­து­தான்.

"நம் மன­தில் தோன்­றும் நேர்­மறை, எதிர்­மறை உணர்­வு­க­ளுக்­கும் வெற்­றிக்­கும் எந்­த­வித தொடர்­பும் இல்லை. நல்ல கதை அமைந்து, நாமும் கடு­மை­யாக உழைத்­தால் வெற்­றி­பெ­ற­லாம் என்­பது மட்­டுமே எனக்­குத் தெரி­யும். அது­தான் என் கொள்கை," என்று சொல்­லும் விஜய் ஆண்­டனி, 'பிச்­சைக்­கா­ரன்' படத்­தின் இரண்­டாம் பாக­மும் உரு­வாகி வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

"முதல் பாகத்­தை­விட அடுத்த படைப்பு பெரி­தாக இருக்க வேண்­டும் என்று நினைத்­துக்கொண்டிருந்­த­போது, நல்ல கதை அமைந்­தது. அத­னால் படப்­பி­டிப்பை உட­னடி­யாக தொடங்­கி­விட்­டோம்," என்கிறார் விஜய் ஆண்டனி.