'விழியோரம்': திரைப்பட விமர்சனம்

'விழியோரம்': திரைப்பட விமர்சனம்

2 mins read
d34d3043-1a7c-464d-8113-38b556a3b866
விழியோரம் படக் குழுவினர். (இடமிருந்து வலமாக நிற்பவர்கள்) திரு.கிட்டிக் கே, திரு. ரிஷி வர்மன், திரு.சக்தி, (அமர்ந்து இருப்பவர்கள்)திருமதி. நித்தியாராவ், திருமதி. கீர்த்தனா. -

ஒரு மாதத்­தில் சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளால் எடுக்­கப்­பட்ட 'விழி­யோ­ரம்' வலைத்­தொ­டர் சென்ற ஆண்டு டிசம்­பர் மாதம் திரைப்­ப­ட­மாக கார்­னி­வல் சினி­மா­ஸில் திரை­யி­டப்­பட்­டது.

திரு­மதி கீர்த்­த­னா­வின் திரைக்­கதை­யி­லும் ரிஷி­வர்­ம­னின் இயக்­கம் மற்­றும் தயா­ரிப்­பி­லும் வெற்றி நடை போடு­கிறது அந்த வலைத்­தொ­டர்.

வேலை தேடிக்­கொண்டு இருக்­கும் வாசு, அள­வுக்கு அதி­க­மாக அன்பு காட்­டும் தாராவை சற்­றும் எதிர்­பா­ராத சூழ்­நி­லை­யில் சந்­திக்­கி­றார். காதல் வளர்­கிறது.

போதைப் பொருள் புழக்­கத்­தால் தந்­தையை இழந்த தாரா, வாசு­வும் போதைப்பொருள் கடத்­த­லில் ஈடு­பட்­டுள்ளதை அறிய நேரி­டு­கிறது.

இதற்­கி­டை­யில், துருவ் என்ற காவல் துறை அதி­காரி, வாசு­வைக் கையும் கள­வு­மாகப் பிடிக்­கத் துடிக்­கி­றார். இறுதியில் பெரும் அதிர்ச்சி. துரு­வ்வின் நெருங்­கிய தோழி­யான ஸ்வாதி தான், போதைப் பொருள் கடத்­தல் கும்­ப­லுக்கே தலைவி என்று தெரிய வரு­கிறது.

திகில் படம் என்­றா­லும் ஆங்­காங்கே நகைச்­சு­வை­யும் உள்­ளது. படத்­தில் மொத்­தம் ஐந்து பாகங்­கள். ஒவ்­வொரு பாகத்­தி­லும் மேற்­கோள்­கள் உள்­ளன. பாடல்­கள் அனைத்­துமே துடிப்­பு­டன் இருந்­தன.

"விஜய்யின் 'மாஸ்­டர்' படத்தின் இசையை முன்­மா­தி­ரி­யா­கக் கொண்டு 'விழி­யோ­ரம்' தொட­ருக்கு இசையமைத்­தேன். சிறப்­பாக இருப்­ப­தா­கப் பல­ரும் பாராட்­டி­னர்," என்கி­றார் இசைய­மைப்­பா­ள­ரான திரு சாந்த் ஜே.

திரை­ய­ரங்­கில் ரசி­கர்­க­ளி­டம் காட்­சி­யின் தன்­மைக்கு ஏற்ப கைதட்­டல், சிரிப்பு, அச்­சம் என பல உணர்­வு­கள் வெளிப்­பட்­டன.

"படம் பார்க்­கும் பொழுது, புது­மை­யாக இருந்­தது. இறு­திப் பாகம் எதிர்­பாராத திருப்­பம். படத்தை நன்கு காட்­சிப்­ப­டுத்தி உள்­ள­னர்," என்கிறார் படம் பார்க்க வந்த திருமதி வந்­தனா நரேந்­தி­ரன்.

இப்­ப­டத்­தில், லாவண்யா, சக்தி, அர்­ஜுன், ஷோபா என்று பல புது முகங்­களை ரிஷி வர்­ம­னும் கீர்த்­த­னா­வும் அறி­மு­கம் செய்­துள்­ள­னர்.

"கொவிட்-19 சூழ­லில் இருந்த மக்­க­ளுக்­குப் புது உணர்வூட்டும் விதமாக இத்­தொ­டரை பட­மாக வெளி­யிட்­டோம். வர­வேற்பு சிறப்­பாக உள்­ளது" என்­கி­றார் திரைக்­கதை எழுத்­தா­ளர் திரு­மதி கீர்த்தனா. கொவிட்-19 கட்­டுப்­பாடு­க­ளி­டையே படக் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­ட­தால், இப்படக்­கு­ழு­வினர் பல சவால்­களைச் சந்­தித்­துள்ளனர்.

"இது எங்­க­ளது முதல் படம் ஆகும். ஒன்­றாகக்கூடி படம் எடுப்­ப­தற்கு பல கட்­டுப்­பா­டு­கள் இருந்­தா­லும், படக் குழு­வி­னர் மிக அரு­மை­யாக ஒத்­து­ழைத்­த­னர். மேலும், முடிந்த அளவு மட்­டுமே செலவு செய்­தோம். சில இடங்­களில் மட்டுமே படப்­பி­டிப்பை நடத்த முடிந்­தது. எனி­னும் படம் சிறப்­பான முறை­யில் உரு­வா­னது. ரசி­கர்­கள் வர­வேற்பு உற்­சா­க­ம­ளிக்­கிறது," என்­கி­றார் இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ள­ரு­மான திரு ரிஷி­வர்­மன்.