'கூர்மன்' சொல்லும் கதை

'கூர்மன்' சொல்லும் கதை

3 mins read
d853a421-9120-40ad-b448-cad1dbbe23c7
-

தமி­ழில் தலைப்பு வைத்­தால் திரைப்­ப­டங்­க­ளுக்கு வரி­வி­லக்கு அளிக்­கப்­படும் என்ற சலுகை இனி கிடை­யாது. இந்த விவ­ரம் தெரி­ய­வந்­த­தும் கோடம்­பாக்­கத்­தில் மீண்­டும் ஆங்­கி­லத் தலைப்­பு­கள் அதி­க­ரித்­து­விட்­டன.

இந்­நி­லை­யில், 'கூர்­மன்' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பு­டன் திரை ரசி­கர்­களை அசத்த வந்­துள்­ளார் இயக்­கு­நர் பிர­யான் பி.ஜார்ஜ்.

தனது படம் வெளி­யா­ன­தும் மொத்த திரை­யு­ல­க­மும் தம்­மைத் திரும்­பிப்­பார்க்­கும் என்­றும் அதற்கு முன்­னோட்­ட­மாக அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டிக்­குக் கிடைத்­துள்ள பலத்த வர­வேற்பு உற்­சா­கத்தை அதி­கப்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

'கூர்­மன்' என்ற தலைப்பை வைக்க சில கார­ணங்­கள் உள்­ள­ன­வாம்.

"இது மன­நல நிபு­ணர்­கள் அல்­லது மனதைப் படிப்­ப­வ­ரின் கதை என்று சொல்­ல­லாம். இவர்கள் எதிரில் இருப்­ப­வ­ரி­டம் பேசிப்­பே­சியே அவர்­க­ளின் உள்­ம­னத்­தில் இருக்­கும் ரக­சி­யங்­களை வாங்­கி­வி­டக் கூடி­ய­வர்­கள்.

"இது­போன்ற நிபு­ணர்­கள் எதி­ரில் இருப்­ப­வர்­க­ளின் முக அசைவை வைத்தே அவர்களின் மன­த்தில் உள்­ள­தைப் படித்­து­வி­டு­வார்­கள். அப்­ப­டிப்­பட்ட அசாத்­தி­ய­மான திற­மை­சா­லி­களை மைய­மாக வைத்து இந்­தப் படத்­தின் கதைக்­க­ளத்தை அமைத்­துள்­ளேன். என்­னுடைய நாய­கன் எதை­யும் கூர்­மை­யாக கவ­னிப்­பவன், கூர்­மை­யாகச் செய­லாற்­று­ப­வன் என்­ப­தால் இந்­தத் தலைப்பை வைத்­தி­ருக்­கி­றோம்," என்­கிறார் இயக்­கு­நர் பிர­யான் பி.ஜார்ஜ்.

ஒரே வரி­யில் சொல்­வ­தா­னால், புத்­திக்­கூர்­மை­யுள்ள நாய­க­னின் திற­மை­யைக் காவல்­துறை பயன்­ப­டுத்­திக்கொள்­கிறது. அதன் பின்­னணி என்ன என்­ப­தைத்­தான் இரண்டு மணி நேர ப­ட­மாக காட்­டப் போகி­றார்­கள். குற்­றச் சம்­ப­வங்­கள், திகில் என்று தொடக்­கம் முதல் முடிவு வரை விறு­வி­றுப்­பாக இருக்குமாம்.

"திருக்­கு­ற­ளில் 'குறிப்­ப­றி­தல்' அதி­கா­ரத்­தில் 701வது குற­ளில் 'கூறாமை நோக்­கக் குறிப்­ப­றி­வான் எஞ்­ஞான்­றும் மாறா­நீர் வையக் கணி' என்று வள்­ளு­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

"அவ­ரது வாக்­குப்­படி இது­போன்ற திற­மை­யா­ன­வர்­கள் உல­கத்­துகே அழகு சேர்ப்­ப­வர்­கள். இந்த குற­ளுக்­கும் இந்­தப் படத்­தின் கதைக்­கும் கூட தொடர்­பி­ருக்­கிறது," என்று பிர­யான் பி.ஜார்ஜ் சொல்­வ­தைப் படம் பார்த்­தால்­தான் புரிந்­து­கொள்ள முடி­யும்.

'மூடர் கூடம்', 'எங்­கிட்ட மோதாதே' படங்­க­ளின் நாய­கன் ராஜா­ஜி­தான் நாய­கன். கதைப்­படி, நாய­கன் இளை­ஞ­ரா­க­வும் அதே­நே­ரம் முதிர்ச்­சி­யு­டன் செயல்­படும் பக்­கு­வம் உள்­ள­வ­ராகவும் இருக்க வேண்­டு­மாம். ராஜா­ஜி­தான் பொருத்­த­மாக இருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு ஃபிளாஷ்­பேக் பகு­தி­யில் காவல்­துறை­யில் பணி­யாற்­று­ப­வ­ராக வரும் அவர், மற்­றொரு பகு­தி­யில் வய­தா­ன­வ­ராக இருப்­பார். இன்­னொரு காட்­சி­யில் தலை­கீ­ழாக நிற்க வேண்­டும் என்­றேன். உடனே 'டூப்' போடா­மல் தாமே நடிப்­ப­தா­கச் சொல்லி முன்­வந்­த­து­டன், எங்­கள் தேர்வு மிகக் கச்­சி­த­மா­னது என்­பதை நிரூ­பித்­தார்.

"தினந்­தோ­றும் படப்­பி­டிப்பை நடத்­தி­ய­தால் யாருக்­குமே ஓய்­வில்லை. எனவே அவர் எப்­போது பயிற்சி மேற்­கொண்­டார் என்­பதை அறிந்து­கொள்ள வேண்­டும். அந்த ரக­சி­யம் தெரி­யா­த­வரை குழப்­ப­மாக இருக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர்.

"அவர் ஒரு கற்­ப­னைக் கதா­பாத்­தி­ர­மாக, ஒரு மாயை­யாக படத்­தில் வந்து போவார். கதைப்­படி அவர் ஒரு மருத்­து­வர்.

"தமிழ் பேசத் தெரிந்த நாய­கி­தான் தேவை எனத் தயாரிப்பாளர் தரப்­பில் கூறப்­பட்­ட­தும், அதை ஏற்­றுக் கொண்­டோம். அப்­போது மன­த்துக்­குள் பளிச்­சென்று தோன்­றி­ய­வர் ஜன­னி­தான்.

"இயக்­கு­நர் பாலா­வி­டம் இருந்து தன் சினிமா வாழ்க்கை­யைத் தொடங்­கி­ய­வர் என்­ப­தால் நடிப்­பில் அசத்தி உள்­ளார் ஜனனி.

"அது மட்டு­மல்ல, அவ­ரது பணி­வும் எளி­மை­யும் என்­னைக் கவர்ந்த அம்­சங்­கள். பல பெரிய இயக்­கு­நர்­க­ளு­டன் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­போ­தும், அறி­முக இயக்குநரான என்­னி­டம் எந்­த­வித பந்­தா­வும் இன்றி பேசி, படத்­துக்­காக கடு­மை­யாக உழைத்­தார். 'தெகிடி' படத்தில் அவர் நாயகி, நான் இணை இயக்­கு­நர். அன்று கொடுத்த மரி­யா­தை­யில் இம்­மி­ய­ள­வும் குறை­ய­வில்லை. எனக்கு மட்­டு­மல்ல, அனை­வ­ரி­ட­மும் மரி­யா­தை­யாக நடந்து கொள்­வார்," என்­கிறார் பிரயான்.