'சென்னைக்கே முதல் இடம்'

'சென்னைக்கே முதல் இடம்'

3 mins read
9f43dfc6-78bd-49b7-abec-d0f9f6da7bb0
-

'மீசைய முறுக்கு' பட நாயகி ஆத்­மி­காவை அவ்­வ­ளவு எளி­தில் ரசி­கர்­கள் மறந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. இயல்­பான நடிப்பு, வசீகரிக்­கும் தோற்­றம், அழ­கிய சிரிப்பு உள்­ளிட்ட அம்­சங்­களை­விட அவர் சென்­னைப் பெண் என்­பது அதி­முக்­கி­ய தக­வல்.

அறி­மு­கப் படத்­துக்­குப் பிறகு ஏனோ ஆத்­மி­கா­வுக்கு நல்ல வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை. இந்­நே­ரம் பார்த்து 'கோடி­யில் ஒரு­வன்' படம் அவரை மீண்­டும் கோடம்­பாக்கத்­துக்கு அழைத்து வந்­தது.

'கண்ணை நம்­பாதே', 'காட்­டேரி', 'நர­கா­சூ­ரன்' ஆகிய படங்­க­ளி­லும் நடித்து முடித்­துள்ள ஆத்­மி­கா­வுக்கு உல­கில் மிக­வும் பிடித்­த­மான ஊர் என்­றால் அது சென்னை மாந­கரம்­தான் என்­கி­றார்.

"உல­கின் எந்த மூலைக்­குச் சென்­றா­லும் அங்கு எத்­தனை வச­தி­களை அனு­ப­வித்­தா­லும், சென்னை மாதிரி வராது," என்­கி­றார்.

முதல் படத்­துக்­கும் இரண்­டா­வது படத்துக்­கும் இடையே நான்கு ஆண்டு இடை­வெளி ஏற்­பட்­டது ஏன் என்று கேட்­ப­வர்­க­ளுக்கு ஆத்­மிகா தரும் சுருக்­க­மான பதில், அதற்கு தாம் காரணமில்லை என்­ப­து­தான்.

"நான்கு ஆண்­டு­களில் கொரோனா நெருக்­க­டி­யி­லேயே இரண்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. இடை­யி­டையே சில படப்­பி­டிப்­பு­க­ளுக்­காக அழைப்பு வந்­த­போது, நானும் கூடு­மா­ன­வரை சமா­ளித்து நடித்­தேன்.

"ஏற்­கெ­னவே நடித்து முடித்த 'நர­கா­சூரன்' முன்பே திட்­ட­மிட்­ட­மிட்­டி­ருந்­த­படி வெளி­யாகி இருந்­தால், இவ்­வ­ளவு பெரிய இடை­வெளி ஏற்­பட்­டி­ருக்­காது. மற்ற இரண்டு படங்­களும் சில பிரச்­சி­னை­கள் கார­ண­மாக இன்­னும் வெளி­யா­க­வில்லை.

"ஒரு படத்­தில் நடித்­துக் கொடுப்­ப­தோடு ஒரு நடி­க­ரின் வேலை முடிந்­து­வி­டு­கிறது. படம் எப்­போது வெளி­யா­கும் என்­பது நம் கையில் இல்லை.

"இன்­றுள்ள நெருக்­கடி மிகுந்த சூழ­லில், ஒரு திரைப்படத்தை வெளி­யி­டு­வதற்­கான சரி­யான தேதி கிடைத்து, அதற்கேற்ப படத்தை முழு­மை­யாக தயார் செய்து வெளி­யி­டு­வ­தற்­குள் தயா­ரிப்­பா­ளர்­கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்­கிறார்­கள்.

"மூன்று படங்­களும் முன்பே வெளி­யாகி இருந்­தால் இப்­ப­டி­யொரு கேள்வி எழுந்­தி­ருக்க வாய்ப்­பில்லை," என்று புலம்­பு­கி­றார் ஆத்­மிகா.

'மீசைய முறுக்கு' படத்­துக்­குப் பிறகு சில வாய்ப்­பு­கள் தேடி­வந்த போதி­லும் அவற்றை ஏற்­க­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், நல்ல கதையா என ஆரா­யா­மல் சகட்டு மேனிக்கு படங்­களில் நடித்துவிட்டு காணா­மல் போக தமக்கு விருப்­ப­மில்லை என்­கி­றார்.

தமது படங்­கள் அனைத்­துத் தரப்பு ரசி­கர்­க­ளை­யும் சென்­ற­டைய வேண்­டும் என்­ப­து­தான் ஆத்­மி­கா­வின் ஆசை. எனவே, நல்ல கதை­க­ளு­டன் வரும் இயக்­கு­நர்­களை மதிப்­ப­தற்கு தாம் தயங்­கி­யதோ தவ­றி­யதோ இல்லை என்று சொல்­கி­றார்.

"உதா­ர­ண­மாக 'கோடி­யில் ஒரு­வன்' பட இயக்­கு­நர் அனந்த கிருஷ்­ண­னி­டம் ஒரு­வித தெளிவு இருந்­தது. கதை சொன்­ன­போதே, படத்தை அவர் சரி­யான பாதை­யில் கொண்டு செல்­வார் என்ற நம்­பிக்கை எனக்­குள் வந்­தது.

"இப்­படி நம்­பிக்கை ஏற்­பட்­டால் மட்­டுமே அந்த வாய்ப்பை ஏற்­கி­றேன். இல்­லை­யெ­னில் இய­லாது என்­பதை தயக்­க­மின்­றிச் சொல்­லி­வி­டு­வேன். அதிக சம்­ப­ளம் என்று ஆசை காட்­டு­வது எல்­லாம் என்­னி­டம் செல்­லாது," என்று சொல்­லும் இந்த இளம் நாயகிக்கு 'வந்­தோம், பணம் சம்­பா­தித்­தோம், சென்­றோம்' என்­பது ஒத்து வரா­தாம்.

படங்­க­ளின் எண்­ணிக்கை முக்­கி­ய­மில்லை என்­றும் திரை­யு­ல­கில் நீடித்து நிற்­க­வேண்­டும் என்­ப­து­தான் தமது இலக்கு என்­றும் தெளி­வா­கப் பேசு­கி­றார்.

சமூக சேவை­க­ளி­லும் ஆத்­மி­கா­வுக்கு ஈடு­பாடு உள்­ளது. சத்­த­மின்றி சில நல்ல காரி­யங்­க­ளைச் செய்து வரு­ப­வர், வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் மரக்­கன்­று­களை நடு­கி­றார்.

தோழி­கள், உற­வி­னர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் சென்­றால், அங்கே ஒரு மரக்­கன்றை நடு­வா­ராம். யாரை­யா­வது சந்­தித்­தால் மரக்­கன்­று­களை கொடுத்து நடச் சொல்­கி­றார்.

"சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு, நீரின் தேவை இதை­யெல்­லாம் உணர்ந்து, ஐயா அப்­துல் கலாம் சொன்­னதை தீவி­ர­மா­கப் பின்­பற்றி அனை­வ­ருக்­கும் முன்­மா­தி­ரி­யாக இருந்து வந்­தார் நடி­கர் விவேக்.

"ஒரு கோடி மரங்­களை நடு­வது அவ­ருடைய கனவு. அதை நான் மட்­டு­மல்ல, நாம் அனை­வ­ரும் சேர்ந்து நிறை­வேற்ற வேண்­டும். மரம் நடு­வ­தற்­காக எங்கே, எப்­போது என்னை அழைத்­தா­லும் நிச்­ச­ய­மாக வரு­வேன்," என்­கி­றார் ஆத்­மிகா.

மரக்கன்று நடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அவ்வப்போது சமூக ஊடகங்களில் விரிவாகப் பதிவிடவும் முடிவு செய்துள்ளாராம்.