கோப்ரா சிக்கல்; விக்ரம் மௌனம்

கோப்ரா சிக்கல்; விக்ரம் மௌனம்

2 mins read
dbeb5873-2dbf-456c-b8b2-eeca0a7a87e9
-

அஜய் ஞான­முத்து இயக்­கத்­தில் விக்ரம் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'கோப்ரா' படத்­தின் படப்­பி­டிப்பு ஒரு­வழி­யாக முடி­வுக்கு வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், படத்­தின் தயா­ரிப்புச் செலவு வெகு­வாக அதி­க­ரித்­து­விட்­டது என்­றும் இதற்கு அஜய் ஞான­முத்­து­தான் கார­ணம் என்­றும் தயா­ரிப்­புத் தரப்பு புகார் எழுப்பி உள்­ளது.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பே 'கோப்ரா' படப்­பி­டிப்பு தொடங்­கி­விட்­டது. லலித்­கு­மார் பெரும் பொருள்­செ­ல­வில் தயா­ரித்து வரு­கி­றார். படப்­பி­டிப்பு முடிந்­து­விட்­டதையடுத்து பட நாய­கன் விக்­ரம் உட்­பட மொத்த படக்­கு­ழு­வுக்­கும் நன்றி தெரி­விப்­ப­தா­க­வும் அஜய் ஞான­முத்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டதை அடுத்து பிரச்­சினை வெடித்­துள்­ளது.

இந்­தப் படத்தை முடிப்­ப­தற்­குள் தாம் பல்­வேறு போராட்­டங்­களைக் கடக்க வேண்­டி­யி­ருந்­த­தா­க­வும் தனது போராட்­டத்­தில் உடன் நின்­ற­வர்­களுக்கு நன்றி தெரி­விப்­பது தமது கடமை என்­றும் அவர் கூறி உள்­ளார்.

இந்நிலையில் பணத்­தைக் கொட்டி படத்தைத் தயா­ரித்த லலித்­கு­மா­ருக்கு அஜய் ஞான­முத்து நன்றி தெரி­விக்­கா­தது மிகப்­பெ­ரிய தவறு என்று ஒரு தரப்பு சாடி­யுள்­ளது.

"திட்­ட­மிட்­ட­தை­விட பல­ ம­டங்கு செலவை இழுத்­து­விட்ட போதி­லும் லலித்­கு­மார் அனைத்­தை­யும் தாங்­கிக் கொண்டு இப்­படத்தை தயா­ரித்­துள்­ளார். இதற்­காக நன்றி தெரி­விக்­கும் பக்­கு­வம் கூட அஜய் ஞான­முத்­து­வி­டம் இல்லை," என்று தமிழ் சினி­மா­வின் முன்­னணி தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான டி.சிவா கூறி­யுள்­ளார். ஆனால் செலவு அதி­க­ரிக்க தாம் எந்த வகை­யி­லும் கார­ணம் அல்ல என்று அஜய் ஞான­முத்து தெரிவித்துள்ளார்.

"சார், 'கோப்ரா' படத்­தின் செலவு அதி­க­ரித்­த­தற்கு நான் கார­ணம் அல்ல. இதை எப்­போது வேண்­டு­மா­னா­லும் எங்கு வேண்டு­மா­னா­லும் என்­னால் நிரூ­பிக்க முடி­யும். எப்­போ­துமே புர­ளி­களை விட ஆதா­ரங்­கள் தெளி­வாக, உரக்­கப் பேசும்.

"படக்­குழு என்­றால் அது தயா­ரிப்­பா­ள­ரை­யும் உள்­ள­டக்­கிய ஒன்­று­தான். எனது தயா­ரிப்­பா­ளரை நான் என்­றும் கைவி­ட­வில்லை," என்று அஜய் ஞான­முத்து விளக்கம் அளித்துள்ளார்.